பெரம்பலூர், ஆக.14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மீதான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் பெரம்பலூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் விடு தலை செய்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பெரம் பலூர் மாவட்டச் செயலா ளர் பி.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ (ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை) ரத்து செய்ததை கண்டித்த காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு வீட்டுக் காவலில் வைத்தது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி வன்மை யாக கண்டித்ததுடன், கட்சியின் தலைவரான முகமது யூசூப் தாரிகாமியை நேரில் சந்திக்க காஷ்மீர் சென்றார். ஆனால் சீத்தா ராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செய லாளர் து.ராஜா ஆகியோரை காஷ்மீருக்குள் நுழைய விடாமல் காவல்துறை தடுத்து கைது செய்தது. இதைக் கண்டித்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட் டத்தில், 2019 ஆகஸ்ட் 9 அன்று மறியல் நடத்தியதாக கூறி அன் றைய அதிமுக அரசு, பெரம்பலூர் காவல்துறை மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை,
ஏ.கே.ராஜேந்திரன், ஏ.கலையரசி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணசாமி, வசந்தா, ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 இல், நீதிபதி சுப்புலட்சுமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர் ப.காமராசு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூ பிக்கப்படாததாலும் அனைவரை யும் விடுதலை செய்வதாக திங்கள் கிழமை (ஆக.14) நீதிபதி சுப்பு லட்சுமி தீர்ப்பளித்தார். செவ்வாய்க்கிழமை 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு வரவேற்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜராகி திறம்பட வாதாடி விடுதலை பெற்றுத் தந்த வழக்கறிஞர் ப.காமராசுவிற்கு, கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.