சென்னை, நவ. 9 - பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 14 முதல் 16 வரை பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் (சிபிஐ-எம்எல்- விடுதலை) ஆகிய இடது சாரிக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. மேலும், நவம்பர் 20 அன்று தலைநகர் சென்னையில், மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைதம்பி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு : இனவெறி பிடித்த இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை அடியோடு அழித்துவிட வேண்டுமென்ற தீவிரத்துடன், அக்டோபர் 7 முதல் வெறித்தனமானத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ள னர். பல்லாயிரம் பேர் படுகாயமுற்று உயி ருக்குப் போராடி வருகின்றனர். லட்சக்கணக் கான மக்கள் உடைமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து அகதிகளாக அலைந்து வருகின்றனர்.
போர் நியதிகளை மீறி இடைவிடாத குண்டுமழை
அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் ஆதர வுடன் இஸ்ரேல் நடத்தும் ராணுவத் தாக்கு தலானது, போர் நியதிகள் அனைத்தையும் நிராகரித்து, பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், மக்கள் குடியிருப்புகள் என நாடு முழுவதும் இடைவிடாது குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் உட்பட பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர். தாயக உரிமைக்காகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கு இந்திய நாடு ஆரம்பக் காலத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த வழிவழியான சமாதான ஆதரவு நிலையில் இருந்து ஒன்றிய பாஜக அரசு முற்றிலும் மாறுபட்டு, அமெரிக்க அரசோடும், அதன் வழி இஸ்ரேலுடன் இணைந்து நின்று பாலஸ்தீன மக்களை கொன்றழிக்கும் கொடுங்குற்றத்து க்கு துணை போகிறது.
போர் நிறுத்தத்தை ஆதரிக்காத மோடி அரசு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்த தீர்மா னத்தை ஆதரிக்காமல் பாஜக ஒன்றிய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலை எடுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசின் செய லாளரும், பாதுகாப்புத்துறை செயலாள ரும் இந்தியா வந்து - நமது ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத்துறை அமைச்சகங்கள் மட்டத்தில் 07.11.2023 முதல் 10.11.2023 வரை (2 x 2) பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு அமெரிக்காவை ஒன்றிய பாஜக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ராணுவ ஆயுதங்கள், நிதியுதவிகளை நிறுத்த வேண்டும்; ஐக்கிய நாடுகள் அவை மிகப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய போர் நிறுத்த தீர்மானம் உடனடியாக ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் பாலஸ்தீ னர்களின் நீண்ட போராட்டத்துக்கு தீர்வாக முன் மொழிந்துள்ள இரு நாடுகள் கொள்கை ஏற்கப்பட்டு, 1967-க்கு முந்தைய நிலையில் மேற்கு ஜெருச லேத்தை தலைமையிடமாகக் கொண்டு சுதந்திர நாடாக பாலஸ்தீனம் ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
நவ.20 சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்'
எனவே, இந்த கோரிக்கைகளை முன்வைத்து, 14.11.2023 முதல் 16.11.2023 வரை தமிழ்நாடு முழு வதும் மாவட்ட, வட்டார அளவில் பரப்புரை இயக்கம் நடத்துவது என்றும், 20.11.2023 அன்று தலைநகர் சென்னையில் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அயலுறவுக் கொள்கையைப் பாது காக்க நீடித்த சமாதானம் நிலவ வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி நடைபெறும் பரப்புரை இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென இடதுசாரிக் கட்சி கள் அழைக்கின்றன. இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.