புதுச்சேரி,ஆக.5- காட்சி ஊடகங்களால் மறைக்கப் படும் உண்மை சம்பவங்களை ஆவ ணப்படங்கள் வெளிபடுத்தி வருகின்றன என்று சர்வதேசஆவணப்பட குறும் பட துவக்க விழாவில் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மும்பை மத்திய திரைப்படப் பிரிவு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 11 வது சர்வதேச ஆவணப் பட குறும்பட விழா புதுச்சேரியில் நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக பொது மேலாளர் டி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். தமுஎகச வின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் “இன்றைக்கு காட்சி ஊடகங்கள் சொல்ல முடி யாத உண்மை சம்பவங்களை ஆவ ணப்படங்கள், குறும்படங்கள் மூலம் காட்சி படுத்தப்பட்டு வருவதை விளக்க மாக பேசினர். அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ், இயக்குநர் லோரன் ஜலிகு ஆகியோர் உரையாற்றினர். விழாவில் பங்கேற்ற விருந்தினர் கள் ஒவ்வொருவரும் தவில் அடித்து விழாவை துவக்கி வைத்தனர். எழுத் தாளர் தமிழ்ச்செல்வன்,தமுஎகச மற்றும் திரை இயக்கத்தை சேர்ந்த தமிழகம், புதுச்சேரி நிர்வாகி கள் சைதை ஜெ.தமிழ்மணி, களப் பிரன், உமா, கலியமூர்த்தி, செல்வம், விநாயகம் உட்பட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் கொ.இரா. இரவிச்சந்திரன் வரவேற்றார். காட்சி ஊடகத்துறை மாணவர்கள் உள்ளிட்ட 120 பிரதிநிதிகள் பங்கேற் றுள்ள திரைப்பட விழா ஞாயிற் றுக்கிழமை (ஆக. 6)வரை நடைபெறு கிது. 9 நாடுகளைச் சேர்ந்த 32 படங்கள் திரையிடப்படுகின்றன. துவக்க நிகழ்ச்சி யில் ‘இமேஜினரி கண்ட்ரி’ என்ற சிலி நாட்டு படம் திரையிடப்பட்டது.