states

சிலிண்டர் விலை உயர்வு: மக்கள் மீது தாக்குதல்

சென்னை,மார்ச் 2- எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்கள் மீது ஒன்றிய பாஜக அரசு  நடத்தியிருக்கும் தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பட்டாளி மக்கள் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “ திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்  வரை காத்திருந்து விட்டு தேர்தல் முடிந்தவுடன் வீட்டு  பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபா யும், வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு ரூ.350 உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ச.ராமதாசு,“ கடந்த 2021 ஆம்  ஆண்டு மே மாதத்தில் சமையல் எரிவாயு உருளை  விலை ரூ.710 ஆக இருந்தது. கடந்த 20 மாதங்களில்  ரூ.408 உயர்ந்திருக்கிறது. அதாவது, மக்களின் வருவாய் 5 விழுக்காடுக் கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58 விழுக்காடு உயர்த்து வது எந்த வகையிலும் நியாயமல்ல” என்று கூறியுள்ளார். உலகச் சந்தையில் எரிவாயு விலை சரிந்திருக்கி றது.

இந்தியாவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை குறைக்கப்பட்டது. வீட்டுப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலையை குறைப்ப தற்கு பதிலாக உயர்த்துவது நியாயமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாதர் சங்கம் சாடல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச் செயலாளர் அ. ராதிகா வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், “ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இடைவிடாமல் கடுமையாக உயர்ந்து  வரும் சூழலில், ஒன்றிய பாஜக அரசு போதாக் குறைக்கு சமையல் எரிவாயு உருளையின் விலைகளை உயர்த்தியுள்ளதை கண்டிக்கிறோம்.  அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் பண வீக்கத்தால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வதறியாது திகைத்து வரும் சூழலில் இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் தலை யில் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது. அத்தியாவ சியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்தும்  ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதி மக்களும்  பயன்படுத்துகிற கேஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.