states

img

பாஜக எம்எல்ஏக்கள் அபகரித்த நிலம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

புதுச்சேரி, அக்.13- மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் எதிரொலியாக பாஜக எம்எல்ஏக்கள் அபகரித்த  நிலம், கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவி லுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் சிலர்  போலி  ஆவணம் தயாரித்து அபகரித்துள்ள னர். இப்புகார் குறித்து காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

சிபிஎம் போராட்டம்

பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்கள் அபகரித்துள்ள நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்  என்று தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் ஆட்சியாளர்களை வலியுறுத்தி போராடி வந்தனர். மேலும் சிபிசிஐடி காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்தியதில் சார்பதிவாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா  மாற்றம் செய்த வட்டாட்சியர் பாலாஜி  உட்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.  கோவில் நிர்வாகம் சார்பில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு சென் னை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில், கோவில் நிலத்தை மனைப்பிரிவு மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து  செய்ய வேண்டும்

. மனை வாங்கி உள்ள அனைவரின் கிரய பத்திரத்தை ரத்து செய்து சொத்தை கோவி லுக்கு ஒப்படைக்க வேண்டும்.  சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். சொத்து மதிப்பு குறித்து வருமான  வரித்துறை உரிய விசாரணை நடத்தி,  6 வார காலத்திற்குள்  நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டிருந்தார். இந்நிலையில்  உயர்நீதிமன்ற உத்தரவின்படி  போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார். காமாட்சியம்மன் கோயில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை(அக். 13) ரெயின்போ நகரில்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் முன்னிலையில் கோவில் அறங்காவலர் குழுவிடம் பத்திரப் பதி வாளர் கந்தசாமி, இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள், சிபிசிஐடி போலீசார்  உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவில் நிலத்தை  முறைப்படி ஒப்படைத்தனர்.


எம்எல்ஏக்களை கைது செய்க : ஆர்.ராஜாங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்  போராட்டத்தால் கோவில் நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே போலி பத்திரம் தயாரித்ததால் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.