கும்பகோணம், நவ.21- கும்பகோணம் மாநகராட்சி மேலக் காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சக்கரபாணி (40). இவர் கும்பகோணம் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக பதவி வகித்து வரு கிறார். இந்நிலையில், திங்களன்று அதி காலை சக்கரபாணி வழக்கம் போல் தூங்கி எழுந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வாசல் முழுவதும் மண் ணெண்ணெய் வாசனையுடன் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடந்ததாகவும் அருகில் சென்று பார்த்த போது வீட்டின் வாசலில் 180 மில்லி அளவு கொண்ட பாட்டிலில் யாரோ மண்ணெண்ணெய் நிரப்பி அதில் திரி வைத்து கொளுத்தி வீசி சென்றதாக வும் ஒரு புரளியான செய்தியை பரப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து கும்ப கோணம் கிழக்கு காவல்துறையினர் மற்றும் தஞ்சை எஸ்பி ரவளி பிரியா உள் ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். சிபிஎம் குழு ஆய்வு இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அருளரசன்,
மாநகர செயலாளர் செந்தில்குமார், நாக ராஜன், அன்புமணி உள்ளிட்ட உண்மை கண்டறியும் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தது. அப்போது அங்குள்ள பொதுமக்களை குழு விசாரித்த போது காளியம்மன் கோவில் தெருவில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்தும் அருகாமையில் ஏராளமான இஸ்லாமியர்களும் குடியிருந்து வரு கிறார்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் சக்கரபாணி பட்டியல் இனத்த வர்களை பாஜகவில் இணைய வற்புறுத்தி னார் என்பதும் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அண்மையில் முயற்சித்துள்ளார் என்ப தும் தெரியவந்தது. அதற்கு அப்பகுதி மக் கள் இணங்காமல், எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதற்காக மக்கள் மத்தி யில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சக்கரபாணி வீட்டின் அருகில் எவ்விதச் சேதமும் இன்றி வீட்டு வாசலில் ஒரு வெடி குண்டு வெடித்திருப்பதாக சித்தரிக்கப் பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மற்றும் அழகுமதி உள்ளிட்ட தெருவாசிகள் இது ஒரு கபட நாடகம் எனவும் மேற்படி சக்கர பாணிக்கு இங்கு ஏதும் எதிர்ப்பும் இல்லை. அவர் பெரிய பிரமுகரும் இல்லை. அவர் சாதாரண கொத்தனார். கூலி தொழி லாளி என தெரிவித்தனர். மேலும் விசார ணையில் இதே தகவலை அங்குள்ள கிராம நிர்வாகிகள் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், நாடு முழுவதும் இதுபோன்று மக்களை திசை திருப்பும் புரளிகளை கட்டவிழ்த்து விடுவது பாஜக வின் தொடர் சதி வேலையாக இருந்து வரு கிறது. இதேபோல் கும்பகோணத்திலும் பாஜகவினர் புரளியை கிளப்பி விட்டு மக் கள் மத்தியில் ஒற்றுமையை குலைக்கவும் மிக மலிவான அரசியல் செய்யவும் முயற் சித்து வருகிறார்கள். ஆகவே தெருவாசி களின் ஒற்றுமையைக் குலைக்க இது போன்ற செயல்களில் ஈடுபடும் சக்கரபாணி மற்றும் பாஜகவினரை துரிதமாக விசா ரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.