கரூர், அக்.12 - சென்னை நிர்மல் பள்ளி நிதியளிப்பு நிகழ்ச்சியில் அக்.10 அன்று, சிஐடியு மாநி லக் குழு தலைவர் அ.சவுந்தரராசனிடம் ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. இந்த நிதி திரட்டலில் சங்கத்திற்கு அப்பாற்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக ரூ.1,03,050 நிதி திரட்டிய, கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழி யர் சங்க செயலாளர் சாந்தி, ரூ.50,000 நிதி திரட்டிய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செய லாளர் தலைமை ஆசிரியை சகிலா, உண்டியலில் பணம் சேர்த்து ரூ.20,000 நிதி வழங்கிய கரூர் மாநகராட்சி கவுன்சி லர் தண்டபாணி - மாரியம்மாள் தம்பதி யின் குழந்தைகள் பூமிதா மற்றும் கார்த்தி கேயனை பாராட்டி, சிஐடியு மாநிலக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் சால்வை அணி வித்து நினைவு கேடயம் வழங்கினார்.