முத்தமிடுதல், தொடுதல் ‘377’ பிரிவின் கீழான குற்றமல்ல!
மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக முக்தார் என்பவர் 377-வது சட்டப்பிரிவு மற்றும் சிறுவர் பாலியல் குற்றத்தடுப்புச் சட்டத்தின் 8 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய், “குற்றம் சாட்டப்பட்டவர், சிறுவனின் மர்ம உறுப்பை தொட்டிருக்கிறார். அதோடு உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதில் 377வது சட்டப்பிரிவை பயன்படுத்த என்ன முகாந்திரமும் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், “சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்படவில்லை” என்பதால், ஓராண்டாக சிறையில் இருந்துவரும் முக்தாருக்கு ஜாமீன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
அசாமில் வெள்ளம்; ஆறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின!
கடந்த சில நாட்களாக அசாம், மேகாலயா, அருணாசல பிரதேச மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோபிலி ஆற்றின் நீர், அளவு வெள்ள அபாயத்தை தாண்டி யுள்ளது. அசாமில் காம்ரூப், நாகோவன், கர்பி அங்லாக், ஹோஜாய், தீமாஜி, சச்சார் ஆகிய ஆறு மாவட்டங்களில் 94 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 25 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 1,732.72 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிக்காக அசாம் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு முதற்கட்டமாக ரூ. 125 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
சில முதலாளிகளுக்கு மட்டுமே பாஜக உதவுகிறது!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் கர்னாவிலுள்ள பழங்குடியினர் மக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது, “நிலம், காடு, நீர் ஆகிய வற்றைப் பாதுகாக்க சிறப்புமிக்க வரலாற்றுச் சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. பழங்குடி யினரை அடக்கவோ, அவர்களின் வரலாற்றை, அடையாளத்தை அழிக்கவோ காங்கிரஸ் முயன்ற தில்லை. காங்கிரஸ் பலவீனமானவர்களுக்கு உதவுகிறது. பாஜக-வினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
`370-வது சட்டப்பிரிவை அகற்றியது சட்டவிரோதமானது!’
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பய ணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பூஞ்ச் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்திய சுதந்திரத்தின் போது, காஷ்மீர் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படை யில்தான் 370-ஆவது சட்டப்பிரிவுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஆனால், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி- அதனைப் பிரிக்க முடியாது என கூறிக் கொண்டே, இந்தியாவுடன் இணைவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த சட்டத்தை நீக்க முடியாது” என்று உமர் அப்துல்லா பேசியுள்ளார்.
நடிகை சிதாலேவுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை முகநூலில் பதிவேற்றியதற்காக, மராத்தி நடிகை கேடகி சிதாலே மகாராஷ்டிராவில் கைது செய்யப் பட்டார். இந்நிலையில், அவரை மே 18 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சரத் பவார் பேசியதாக போலியான ஒரு வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, அதன்கீழ் “நீங்கள் பிராமணர்களை வெறுக்கின்றீர்கள். உங்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கிறது’’ என்று கேடகி சிதாலே பதிவிட்டிருந்தார். இதற்காக 200 காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிதாலேவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘பொய்களின் பாட்ஷா’
“ஒன்றிய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் பதில ளித்துள்ளார். அதில், “தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பிய அமித்ஷாவை ‘பொய்களின் பாட்ஷா’ என்று அழைக்கலாம் விமர் சித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதல் கார்ப்பரேட் நிறு வனங்களின் கைகளுக்கு சென்று விட்டதாகவும் கே.டி.ராமா ராவ் சாடியுள்ளார்.
‘அதானி குடும்பத்திற்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை’
“இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கவுதம் அதானி, அவரது மனைவி ப்ரீத்தி அதானி ஆகியோரில் ஒருவர் ஆந்திராவிலிருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், “தங்களைப் பற்றிய செய்திகள் முற்றிலும் தவறான தகவலாகும். இது போன்ற செய்திகள் எப்போது எல்லாம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் பரவி வருவது வாடிக்கையாகி விட்டது. இதுபோன்ற செய்தி ஊடகங்களில் வருவது துரதிர்ஷ்டவசமானது” என்று அதானி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக இளைஞரணி கூட்டத்தில் பேடிஎம், ‘கூ’ முதலாளிகள்
இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பாஜக இளைஞரணி தேசிய பயிற்சி முகாமில் பேடிஎம் (Paytm) நிறுவனர் விஜய்சேகர் சர்மா, ‘கூ’ (koo) சமூக வலைதள நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணன், ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி, ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஆர். ரகுராமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ராணுவத்தில் இருந்து தலைமைப் பண்புகளைக் கற்றுக் கொள்வது குறித்து, கேப்டன் ஆர். ரகுராமனும், ‘சட்டத்தைக் கேடயமாகவும், தாக்கும் ஆயுதமாகவும் எப்படி பயன்படுத்த முடியும்’ என்று சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜியும் பயிற்சியளிக்க, 2014-க்குப் பிறகு அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் புத்தாக்க தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா, ‘கூ’ நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரையில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 45 ஆயிரத்து 490 என்று ஆப்பிரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் என்ற அமைப்பு கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 626 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனீசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில்தான் பெரிய அளவில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று இந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் போதிய கவனத்துடன் செயல்படவில்லை என்று சுகாதாரத்துறை அலுவலர்களை வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மருந்துக்கடைகள் 24 மணி நேரமும் திறந்துவைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், பொது மக்களுக்கு மருந்துப் பொருட்கள் எந்தவிடத் தடையுமில்லாமல் கிடைக்க ராணுவம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏமன் பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டணிப் படைகள் வெளியேற இதுதான் சரியான நேரம் என்று ஏமன் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது அல் அடிபி வலியுறுத்தியுள்ளார். ஏமன் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட அவர், தற்போதுள்ள நிலையில் ஏமன் படைகள் பலமடைந்துள்ளன. அதோடு, நவீன ஆயுதங்களும் கிடைத்துள்ளன என்று எச்சரித்துள்ளார்.