புதுதில்லி, அக். 8 - மதம் மாறிய பட்டியல் வகுப்பின ருக்கும், இடஒதுக்கீடு உள்ளிட்ட உரி மைகளை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ் ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை ஒன்றிய அரசு நிய மித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த போது பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இந்துக்க ளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப் பட்டது. பின்னர், கடந்த 1956-ஆம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ஆம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த பட்டியல் வகுப்பினருக்கும் இடஒதுக் கீடு உரிமை நீட்டிக்கப்பட்டது. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங் குவதற்கு 1996-இல் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில், சாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்க வலியுறுத்தியும், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறிய பட்டி யல் வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கடந்த 2004-ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் தலித் கிறிஸ்த வர்களின் தேசியக் கவுன்சில் சார்பி லும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கடந்த 2004-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. மதம் மாறிய பட்டியல் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டில் அந்த ஆணை யம் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அப்போதைய ஒன்றிய அரசு, அறிக் கையை ஏற்கவில்லை” என்று தெரி வித்தார். இதையடுத்து, “மதம் மாறிய பட்டி யல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த வழக்கு அக்டோபர் 11-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த பின்னணியில், மதம் மாறிய பட்டியல் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டு உரிமை வழங்க கோருவது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பால கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கூடுதல் செயலாளர் சுரேந்தர சிங் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார்.
அதில், “பழங்காலம் முதல் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மக்களு க்கு பட்டியல் வகுப்பினர் என்ற தகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதர மதங்களை சேர்ந்தோருக்கும் பட்டியல் வகுப்பினருக்கு உரிய தகுதி யை வழங்குமாறு, சில குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. புதியவர்களுக்கு பட்டியல் வகுப்பி னர் என்ற தகுதியை வழங்க தற்போது அந்தப் பிரிவில் உள்ள மக்களும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இது சமூக நீதி, அரசமைப்பு சாசனம் சார்ந்த முக்கிய விவகாரம் ஆகும். எனவே, இதுகுறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையில் ஆணை யம் அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானி யக் குழுவை சேர்ந்த சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல் படுவார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், “பட்டியல் வகுப்பினர் என்ற தகுதியைக் கோரும் புதிய வர்களின் கோரிக்கைகளை ஆணை யம் பரிசீலிக்கும். புதியவர்களை சேர்த் தால் தற்போது எஸ்.சி. பிரிவில் இட ஒதுக்கீடு பெறுவோருக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர விவகாரங் கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்யும். ஆணையத் தலைவர் பதவி யேற்ற நாளில் இருந்து 2 ஆண்டுக ளில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அறிவிக் கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.