states

img

நாளை கேரள சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு

திருவனந்தபுரம்,நவ.14- சுற்றுலாத் துறையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக கேரளத்தின் முதல்  சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு திரு வனந்தபுரத்தில் நவ.16 வியாழனன்று நடை பெறுகிறது. மதியம் 12 மணிக்கு ஹயாத் ரீஜென்சியில் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைப்பதாக . சுற்றுலாத்துறை அமை ச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் கூறினார்.செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறிய தாவது:  அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், கே.ராஜன், தலைமைச் செயலாளர் டாக்டர்.  வி.வேணு, சுற்றுலாத்துறை செயலர் கே. பிஜு, திட்டக்குழு உறுப்பினர் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுற்றுலா மாநிலமாக கேரளாவை உலகிற்கு அடையாளப்படுத்து வதுடன், புகழ்பெற்ற சுற்றுலா மையங்கள் மற்றும் புதுமையான சுற்றுலா தயாரிப்பு களை முதலீட்டாளர்களுக்கு அறிமுகப் படுத்துவதே நோக்கமாகும். “கேரளாவில் முதலீட்டு வாய்ப்புகள்” என்ற தலைப்பில் திட்ட விளக்கமும், “சுற்றுலா முதலீடு: முன்னோக்கி செல்லும்  வழிகள்” என்ற தலைப்பில் குழு விவாத மும் நடைபெறும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பர். மேலும் முதலீடு எதிர்பார்க்கப்படும் பகுதிகள் மாநாட்டில் அறிவிக்கப்படும். வாகமனில் உள்ள சில்லுபாலம் மற்றும் கடலோர மாவட்ட ங்களில் மிதக்கும் பாலம் ஆகியவை பொது-தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்பட்ட வாகமண் சில்லுப்பாலத்தை இதுவரை 50,000 பேர் பார்வையிட்டுள்ளனர். 40 நாட்களில் 20,000 பேர் சாவக்காடு மிதக்கும் பாலத்திற்கு வந்தனர். செய்தியாளர் சந்திப்பில் சுற்றுலா இயக்குநர் (பொறுப்பு) எஸ்.பிரேம் கிருஷ்ணன், கேடிஐஎல் தலைவர் எஸ்.கே.சஜீஷ், கே.டி.ஐ.எல் நிர்வாக இயக்குநர் டாக்டர். கே மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.