states

ஒற்றைத் தலைமை: அதிமுகவில் கட்டப்பஞ்சாயத்து

சென்னை, ஜூன் 19- அதிமுகவில் ஒற்றைத் தலைமை யை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி எடப் பாடி பழனிச்சாமி தரப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருடன் கட்டபஞ்சா யத்தில் ஈடுபட்டுள்ளனர்.  முக்கிய பிரச்சினைகளில் முடிவு கள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமையின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வரு கின்றனர். இதை வலியுறுத்தி  வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.  கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை ஞாயிறன்ற 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மூத்த தலைவர்கள் சமரசத்தில் ஈடுபட்டு ள்ளனர். ஆனால் ஒற்றைத்தலை மையை பன்னீர் செல்வம் ஏற்கமறுத்து வருவதாக அவரது தரப்பு ஆதர வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலை யில் ஞாயிறன்றும் எடப்பாடி பழனி சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் தனித்தனியாக ஆலோசனை நடத்தி னார்கள்.

எடப்பாடி பழனிசாமியை ஞாயி றன்று சந்தித்த மூத்த தலைவர் தம்பிதுரை பின்னர் ஒ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தி னார்.  நீண்டநேரம் இந்த ஆலோசனை நீடித்தது. முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன் எடப்பாடி பழனி சாமியுடன் நீண்ட நேரம் பேசினார். பிறகு அவர்  ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.சனிக்கிழமை இரவும் ஓ.பன்னீர் செல்வத்துடன் செங்கோட்டையன் பேசினார்.  ஒ.பன்னீர் செல்வம் இரட்டை தலைமை நீடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் மூத்த தலை வர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வியில் முடிந்தது. கடந்த 3 ஆண்டுகளாக சமரசம் செய்து கொண்டதாகவும் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒற்றை தலைமையை ஏற்படுத்தியே தீருவது என்று எடப்பாடி பழனிசாமி கோஷ்டி தீவிர மாக உள்ளது. இதனால் அதிகவில் மீண்டும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது.அதிமுகவில் நடைபெறும் மோதலை சசிகலா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.