சென்னை, செப்.6- அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமி யாரை கைது செய்ய முதல மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைச் சரை ஒரு சாமியார் மிரட்டு வதை நாடும், காவல்துறை யும் வேடிக்கை பார்க்கிறது என அவர் கூறியுள்ளார். அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமகம்ச ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்து மிரட்டியுள்ளதோடு, அமைச் சரின் தலையை சீவிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப் படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பரவலாக கண்ட னம் எழுந்துள்ள போதும், தேவைப்பட்டால் பரிசுத் தொகையை அதிகரிக்க தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு போதுமே” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது என அவர் கூறியுள்ளார்.