states

சோதனை என்ற பெயரில் சிபிஐ அமைப்பு நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுகிறது!

புதுதில்லி, மே 27 - சோதனை என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் வரம்பு மீறுவதாக சிவ கங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றையும் கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ளார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகனும் சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது  தந்தையின் செல்வாக்கைப் பயன் படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர் களுக்கு விசா வாங்கிக் கொடுத்த தாகவும்  இதற்காக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ அண்மையில் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தி, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை கைது செய்தது.

கார்த்தி சிதம்பரத்தையும் தில்லி சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து கடந்த இரண்டு நாட்களாக விசார ணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிபிஐ வரம்பு மீறுவதாகவும், தன்னையும் தன் குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாகவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். “பொய் வழக்குப் போட்டு எனது குரலை ஒடுக்க சிபிஐ முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே என்னையும், எனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறி வைக்கின்றன. ரெய்டுகள் என்ற பெய ரில் சிபிஐ அதிகாரிகள், ஐடி துறை  நாடாளுமன்ற நிலைக்குழு தொடர் பான சில முக்கியமான ஆவணங் களைக் கூட எடுத்துச் சென்றுள்ளனர். அந்த நிலைக்குழுவில் நான் ஒரு  உறுப்பினராக உள்ளேன். நிலைக்குழு சார்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள சாட்சியங்களை கேட்க நான் தயார் செய்த கேள்வி கள் அடங்கிய கோப்புகளைக் கூட  அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ள னர். இது வரம்பு மீறல். நாடாளு மன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறி விட்டது. எனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் சிபிஐ நேரடியாக தலையிடுகிறது . இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கார்த்தி சிதம்பரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.