சென்னை, மே 16- சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்து பக்தர்களும் கனகசபை தரிசனம் செய்ய தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது என்று இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரி வித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி மூலம் தானாக இயங்கக்கூடிய இறை அம்சம் பொருந்திய 2 சோலார் விளக்கு இத்திட் டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்புவரை கனக சபை தரிசனம் முறையாக நடைபெற வில்லை. கொரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட் டுள்ளது. ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரி சனம் செய்ய தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் பெறப்பட்ட புகாரின் மீது இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது”என்றார்.