states

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா?

திருநெல்வேலி, செப்.22- புதிதாக மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரை யறை செய்யப்படும் என உள்துறை  அமைச்சர் கூறுவது, தாமாகவே  மக்கள் தொகையை கட்டுப்படுத்து வதில் பங்களிப்பு செய்துள்ள தென்மாநில மக்களுக்கு வழங்கும் தண்டனையாகி விடும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நெல்லையில் தீக்கதிர் பதிப்பு அலு வலகத்தை திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது: தென் மாநிலங் களில் மக்கள் தொகை கட்டுப்பாடு இயல்பாக நடந்துள்ளது. வட மாநிலங் களில் அப்படியான நிலைமை இல்லை.  எனவே மக்கள் தொகையின் அடிப்படை யில் பிரதிநிதித்துவம் வழங்கினால் தென்  மாநிலங்களில் தற்போது இருப்பதை விட  26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை  குறையை வாய்ப்பு உள்ளதாக தெரி கிறது.  இது மக்கள் தொகையை கட்டுப் படுத்திய தென் மாநில மக்களுக்கு வழங்கப்படும் தன்டனையாக அமைந்து விடும். எனவே தொகுதி மறுவரையறை என்பது புதிய கணக்கெடுப்பை நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் கூடாது. ஏற்கனவே இருக்கும் பிரதிநிதித்து வம் நீடிக்க வேண்டும். மகளிருக்கு இட ஒதுக்கீடு பாஜகவின் நாடகம் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றி ணைந்து இந்தியா கூட்டணியை உரு வாக்கியுள்ளது. இந்த கூட்டணியை உடைப் பதற்கு பாஜக பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு  கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 சத விகித இடஒதுக்கீடு நிறைவேற்றி உள்ள தாக கூறுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கட்சியும் நாடாளுமன்றத்தின் கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியும் இதனை கண்டுகொள்ள வில்லை. பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சி க்கு வந்த போது இந்த சட்டத்தை நிறை வேற்றி இருந்தால், அதன் பயனை பெண்கள் தற்போது அடைந்திருப்பார் கள். இந்த சட்டமானது 2029 இல் தான் அமலுக்கு வரும் என்று கூறுகிறார்கள். மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது பாஜக நடத்தும் ஒரு நாடகம். தில்லியில் நடந்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில், கூட்ட ணியில் கூடுதலாக கட்சிகளை இணைத்து ‘இந்தியா’ கூட்டணியை விரிவு படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஊடகங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இருப்பினும் சில ஊடகங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பொய் பிரச்சாரங்களை செய்து வரு கின்றது. பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை பாஜக நடத்தி வருகிறது.