states

ஈரோடு: அருந்ததியினரின் மாட்டிறைச்சி கடைகள் அகற்றம்

சென்னை, மார்ச் 14-  ஈரோடு மாவட்டம், புன்  செய் புளியம்பட்டி நகராட்சி  வாரச்சந்தையில் சுமார் 50  ஆண்டு காலமாக 13 அருந்த தியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டுள்ளது.இக் கடைகளை மீண்டும் அதே இடத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கடிதம் எழுதி யுள்ளார். முதலமைச்சருக்கு அனுப் பிய கடிதம் வருமாறு:          ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் வட்டம், புன்  செய் புளியம்பட்டி நகராட்சிக்  குட்பட்ட வாரச் சந்தையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக  அருந்ததியர் சமூகத்தைச்  சேர்ந்த 13 குடும்பங்கள்  மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்  வாகம் 22.11.2022 அன்று  புல்டோசர் கொண்டு  அனைத்துக்கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கி யுள்ளது.

இதனால் அதிர்ச்சி யடைந்த அருந்ததிய குடும்  பங்கள், நகராட்சி நிர்வா கத்தை பலமுறை அணுகி கடை நடத்த அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போதும் இதுவரை  தீர்வு காணப்படவில்லை என்  பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரு கிறேன். சந்தைக்கு அருகில் மற்ற இறைச்சிக் கடைகள் எல்லாம் செயல்பட்டு வரு கின்றன. ஆனால் மாட்டி றைச்சிக் கடை மட்டும் நடத்  தக்கூடாது என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகி றோம். இந்த 13 குடும்பங்க ளின் ஒரே வாழ்வாதாரம் மாட்டிறைச்சி விற்பனை செய்வது தான். தற்போது  நிரந்தரமான கடை இல்லாத தால் பெரும் பாதிப்புக்கு இக்  குடும்பங்கள் ஆளாகியுள் ளன. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள சந்தையில் ஏதோ ஒரு  பக்கம் மாட்டிறைச்சி கடை  நடத்துவதால் பாதிப்பு எது வும் ஏற்படப் போவதில்லை. இருப்பினும், பொருத்தமான வேறொரு இடத்தில் சுகா தாரமான முறையில் கடை களை நகராட்சி நிர்வாகமே அமைத்துக் கொடுத்து பிரச்  சனைக்கு தீர்வு காண நட வடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக முதன்மை செய லாளர் (நகராட்சி நிர்வாகம்) முதற்கொண்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு மனுக்கள் அளித்தும் மக்க ளின் கோரிக்கைக்கு இது வரை தீர்வு காணப்பட வில்லை. எனவே, முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலை யிட்டு பாதிக்கப்பட்ட 13  அருந்ததியர் குடும்பங்க ளும் மீண்டும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கை எடுத்து உத விட வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.