சென்னை, ஜன.22- செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். கொலையுண்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ-யின் தாயார் பிரியாவை ஞாயிறன்று (ஜன.22) தாம்பரம் கன்னடபாளையத்தில் சந்தித்து கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல் முருகன் (தென்சென்னை), பாரதி அண்ணா (செங்கல்பட்டு), தாம்பரம் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து முதலமைச்ச ருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கடந்த 31.12.2022 அன்று சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலையை மறைக்க கூர்நோக்கு மேலாளர் மற்றும் மாவட்ட குழந்தை கள் நல அலுவலர் சிவக்குமார், தலை மைக் காவலர் ஜெயராஜ், சரஸ்வதி, சாந்தி ஆகியோர் சிறுவனின் தாயார் பிரியாவை இரண்டு நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டுள்ள னர். இந்நிலையில் பிரியா சிலருடைய உதவியோடு மாவட்ட ஆட்சியரை சந் தித்து புகார் கொடுத்துள்ளார். அதன டிப்படையில் மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுத்து, நீதிமன்ற நடுவர் முன்னிலையில் சிறுவனின் பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. நீதி மன்ற நடுவரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் 12.01.2023 அன்று கொலை வழக்கு பதிவு செய்து குற்ற வாளிகள் 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கொலை வழக்கு மூடி மறைக் கப்பட்டிருக்கும்.
இக்கொலை வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள அனைவரையும் கைது செய்வதுடன், சிறுவனின் தாயாரை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டி, பிரேத பரிசோதனையை இரண்டு நாட்களுக்கு மேல் தாமதப் படுத்தி வழக்கை மூடி மறைக்க, திட்ட மிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் தப்பி விடா மல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனைப் பெற்றுதர வேண்டும்.
ரூ.50 லட்சம் நிவாரணம் தருக!
சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயார் கணவனை இழந்தவர். நிரந்தர வரு மானம் இல்லாமல், 5 குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெரும் சிர மத்தில் வாழ்ந்து வருபவர். கோகுல் ஸ்ரீயின் வருமானத்தை நம்பியிருந்த குடும்பமாகும். இவர்களுக்கு நிரந்தர மான வீடும் இல்லாமல் தாம்பரம் கன்ன டபாளையம் குப்பை மேட்டிற்கு அரு கில் வசித்து வருகின்றனர். தனது மூத்த மகனை இழந்து எதிர்காலத்தில் வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். எனவே, இவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வசிப்பதற்கு அரசு வீடும், அரசு வேலையும், குழந் தைகள் அரசு பள்ளியில் படிப்பதற் கான வசதிகளையும் செய்து தர வேண்டும். செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தொடர்ந்து பல சிறு வர்கள் அடித்து சித்ரவதைக்குள்ளாக் கப்படுவது தொடர்ந்து நடந்து வருவ தாக தெரிகிறது. ஏற்கெனவே சில சிறு வர்கள் இம்முகாமிலிருந்து காணா மல் போய்விட்டதாகவும் அறிய முடி கிறது. எனவே, செங்கல்பட்டு கூர்நோக்கு சிறுவர் இல்லம் உள்ளிட்ட அனைத்து கூர்நோக்கு இல்லத்தை யும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்து வதற்காக உருவாக்கப்பட்டவைகளா கும். ஆனால் இச்சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், மருத்துவர்களும், உளவியல் நிபு ணர்களும் பணியமர்த்தப்பட வேண் டும். இதனால் இச்சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்படும் சிறு வர்கள் தொடர்ந்து குற்றவியல் நட வடிக்கைகளுக்கு உள்ளாகும் ஆபத் தான நிலைமை ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களின் பராமரிப்பு குறித்தும், உரிய பயிற்சி பெற்ற ஆசி ரியர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவர்களை பணியமர்த்தி இங்கு அனுப்பப்படும் சிறுவர்கள் எதிர்காலத் தில் நல்ல சிந்தனையுள்ள இளை ஞர்களாக வளர்த்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.