states

அதிகார வரம்பை மீறக்கூடாது என ஆளுநருக்கு அறிவுறுத்திய தீர்ப்பு

சென்னை,மே 18- அதிகார வரம்பை மீறக்கூடாது என்று ஆளுநருக்கு அறிவுறுத்தியுள்ள தீர்ப்பு பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்று  பல்வேறு கட்சித்தலைவர்கள் தெரி வித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி:  மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத - மறுக்கப்பட  முடியாத அருமையான தீர்ப்பு. அரசமைப்புச் சட்ட அமைப்பின்மீது வெகுமக்களுக்கும், சட்ட நிபுணர்க ளுக்கும் பெருத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனிதநேயம் பொங்கும் தீர்ப்பு இது. அதிகார வரம்பை மீறக்கூடாது என்று ஆளுநருக் கும் அறிவுரையும்கூட இந்த தீர்ப்பு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரு கின்றது. உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டி இருக்கிறது. மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். தாயின் அறப்போர் வென்றது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:  

ஒரு  தாயின் அறப்போர் வென்றது. அற்புதம்  அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து  ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்து ழைப்பால் விளைந்த நீதி. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள். பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு: பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவா`ஹிருல்லா: பேரறிவாளனை விடுதலை செய்து  வழங்கிய தீர்ப்பில்  தமிழ்நாட்டு ஆளுநரின்இந்த காலதாமதச் செயல்  தவறானது என்று குட்டு வைக்கப் பட்டுள்ளது. இத்தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டுஅமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.