சென்னை, ஆக. 31- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சித் துள்ளது. கடந்த 2001 முதல் 2006 வரை யிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதல் வராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்த வில்லை என்றும், புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அறிக்கை அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படை யில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட் டோருக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர்கள் அனைவரையும் 2012ஆம் நீதி மன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடு விக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு வியாழனன்று (ஆக. 31) காலை முதல் வழக்காக விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பச்சோந்தியாக மாறிய லஞ்ச ஒழிப்புத்துறை
ஓபிஎஸ் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் அழிந்து, தற்போது எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சிக்கு பச்சோந்தியாக மாறியுள்ளது. எம்பி, எம்எல்ஏக்களுக்கு சட்டம் செல்லாது என்று அறிவித்து விடலாம். சிறப்பு நீதி மன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்த ரவுகளும் ஆராயப்படும். 374 விழுக்காடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆட்சிக்கு முன்பு ஒரு நிலைப்பாடும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு நிலைப்பாடும் எடுத்துள்ளது. குற்ற வழக்குகளின் விசாரணை கேலிக் கூத்தாகப்பட் டுள்ளது.அனைத்து வழக்குகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதுபோன்ற தவறுகள் நடை பெறுவதை அனுமதித்தால் ஊழல் புற்று நோய் போல் சமுதாயத்தை சிதைத்து விடும். அரசிடம் இருந்து விலகி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.