states

ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை

சென்னை, ஆக.11- திரைப்பட உலகில் 70 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. பிறகு தெலுங்கு தேச கட்சியில் சேர்ந்தார். பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். தற்போது ராம்பூர் தொகுதியில் எம்பியாக உள்ளார். சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் திரை யரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணி புரிந்த தொழிலாளர்களிடம் வசூ லிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது  தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து,  ஜெயப்பிரதா உள் ளிட்ட மூவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதி மன்றம் நீதிபதி முன்பு  விசாரணைக்கு வந்தது, ஜெயப்பிரதா தரப்பில்,  தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு  வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும்  ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.