states

ஜெ. ஓட்டுநரின் சகோதரர் சிபிசிஐடி முன் ஆஜர்

கோயம்புத்தூர், செப்.14- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தன பால் வியாழனன்று கோவை யில் சிபிசிஐடி அலுவலகத் தில் அதிகாரிகள் முன் ஆஜ ரானார்.  அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், “கொட நாடு வழக்கில், யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள் ளார். இந்த வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறையினர், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நபர் களுக்கு தொடர்பு உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை  நான் திறந்து பார்க்கவில்லை. எடப் பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன்,  அனு பவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகி யோருக்கு தொடர்பு இருக்கிறது. சிபிசிஐடி விசார ணையில் அனைத்தையும் சொல்வேன். விசாரணைக்கு 200 சதவிகிதம் ஒத்துழைக்க தயார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக   பேரம் பேசினார்கள் என்றார்.