தமிழக விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே ஆறுத லான விஷயம் என்றால் அது நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள்தான். அங்கு அரசு நிர்ண யித்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு நெல் விற்க முடியும். வெளிச் சந்தையில் அவ்வளவு விலை கொடுத்து வியாபாரிகள் வாங்குவதில்லை. அதனா லேயே கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை என்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகள் காத்திருந்தாவது தங்கள் நெல் மணி களை விற்கின்றனர். ஆரம்பத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்காமல், வியாபாரிகளிடம் இருந்து நெல்லை வாங்கு கின்றனர்; விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அவற்றை கொள்முதல் நிலை யங்களில் அதிக விலைக்கு விற்று காசு பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தடுக்க பல நட வடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு நேரடி கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் இருந்து நெல் வாங்குவது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், வேறு வேறு வழியில் விவசாயிகளிடம் இருந்து சுரண்டல்கள் தொடர்கின்றன. 80 கிலோ கொண்ட மூட்டையை, நாற்பது, நாற்பது கிலோவாக கொள்முதல் நிலையங்களில் பிரித்து தைக்கின்றனர். ஒரு மூட்டைக்கு விவசாயியிடம் இருந்து 30 ரூபாய் கட்ட ணமாக வசூலிக்க வேண்டும். ஆனால், ஒரு மூட்டைக்கு 80 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதுதவிர, அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் கமிஷன், மூட்டை எடைபோடுவோர், தைப்பவர்களுக்கு சாப்பாடு, சில நேரங்களில் மதுபானம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது வரை லஞ்சத்தின் பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் நடக்கும் இந்த முறைகேடுகளுக்கு உயர் அதிகாரி கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கொள் முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை கையாளு வதில் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்படும் இழப்புக்கு, கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் ரெக்க வரி என்ற பெயரில் பல லட்சம் ரூபாயை வசூலிக்கின்ற னர். இதில் 70 சதவிகித ஊழியர்கள் கடன் மற்றும் வட்டிக்கு வாங்கி தங்களது பெயரிலுள்ள ரெக்கவரி தொகையை கட்டிவிட்டு பணியில் சேர்ந்துள்ளனர். 30 சத விகித ஊழியர்கள் பணம் கட்ட வழியில்லாமல் வேலை யில் சேர முடியாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். கொள்முதல் நிலையங்களில் நடக்கும் பெரும்பாலான முறைகேடுகளுக்கு இதுவே முக்கிய காரணம் என்று நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் கடந்த 2 ஆண்டு களில் எடையிழப்பு, அபராதம் என்ற பெயரில் நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் அதிகாரிகள் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமையோ, அதிகா ரமோ இல்லை. எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு, நெல் கொள்முதல் நிலைய பணியாளர்க ளிடம் பல கோடி ரூபாய் வசூலித்த மண்டல மேலா ளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சட்டவிரோ தமாக வசூலித்த பணத்தை சம்பந்தப்பட்ட பணியா ளர்களிடம் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதே நிலைமை தான் இப்போதும் கொள்முதல் நிலையங்களில் தொடர்கிறது. கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குக ளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் டெல்டா மாவட்டங்க ளில் லட்சக்கணக்கான மூட்டைகள் எந்த பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன. இதன் விளைவாக வரும் ஆண்டுகளில் பழைய மாதிரியே கொள்முதல் நிலைய ஊழியர்கள் ரெக்கவரி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கொள்முதல் நிலை யங்களில் பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர். இதைதாண்டி, தேவைக்கு ஏற்ப ஆங்காங்கே தொடங்கப்படும் தற்காலிக நேரடி கொள்முதல் நிலை யங்கள், ஆளும் கட்சி சார்ந்தோருக்கு அவுட்சோர்சிங் முறையில் வழங்கப்படுகிறது. இதிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் அடுத்தபடியாக அதிகம் லஞ்சம், முறைகேடுகள் நடக்கும் மையங்களாக நேரடி கொள்முதல் நிலையங்கள் மாறிவருகின்றன. கீழ்மட்டம் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரை இருக்கும் முறைகேடுகளுக்கு, நிர்வாக ரீதியான தீர்வுக்கு அரசு உரிய வழிகாண வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.
-ஆரூரான்