மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக திருமங்கலத்திலிருந்து ஒத்தக்கடை வரை 76 இடங்களில் மண் மாதிரி சேகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக திரு மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சண்முக நக ரில் 30 அடி ஆழத்தில் இரு ந்து பரிசோதனைக்கான மண் சேகரிப்பு பணி நடை பெற்றது. மதுரை மெட் ரோ ரயில் சேவைக்காக தமிழ்நாடு அரசு ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற வணிக நிகழ்வில், குஜராத் கூட்டு றவு பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் குஜ ராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்ட மைப்பின் (ஜிசிஎம் எம்எஃப்) பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த இருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக, நியூசி லாந்து பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அகமதா பாத் மாவட்டத்தில் கழிவு நீர் பாதையை சுத்தம் செய்யும் போது 24 மற்றும் 32 வயதுடைய இரண்டு துப்புரவு பணியாளர்கள் மூச்சுத் திணறி இறந்தனர்.
சந்தா செலுத்தாத போதி லும் 10 லட்சம் கணக்கு களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.
கர்நாடகா சட்டமன்ற தேர்த லுக்கு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பா ளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து 2 வேட்பாளர்களையும் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அறி வித்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், ஓபிஎஸ் அணி யை சேர்ந்த 2 வேட்பாளர் களும் வேட்பு மனுவை வாபஸ் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கேரளா, தில்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக ஒன்றிய சுகா தார அமைச்சகத்தின் தரவு களில் தகவல் வெளியாகி யுள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா மற்றும் ஹெட்டரோ ஆகிய நிறுவனங்களின் மரு ந்து தயாரிப்புகளை அமெரி க்க சந்தையில் திரும்ப பெறு வதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.