states

கேம்பஸ் இன்டர்வியூக்கு குட்பை: தேர்வு முறையை மாற்றிய ஐ.டி. நிறுவனங்கள்

சென்னை, செப். 2- ஒருகாலத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக மாண வர்களை அள்ளிச் சென்ற ஐ.டி.  நிறுவனங்கள், இனி சில அடிப்படை யான தகுதிகளும், சில குறிப்பிட்ட ஏரியாக்களில் நிபுணத்துவமும் தேவை என கட்டாயமாக்கி உள்ளது. உலகமே இன்று தகவல் தொழில்நுட்பங்களின் கட்டுப் பாட்டில் தான் இயங்குகிறது என்று  சொல்லும் அளவுக்கு ஐடி துறை யின் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. குறிப்பாக, 2010க்கு பிற கான காலக்கட்டத்தில்தான் ஐ.டி. துறை அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. அப்போதுதான், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களை அப்படியே ஐடி நிறுவனங்கள் வேலைக்கு எடுத்தன. கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் அந்த சமயத்தில்தான் பிர பலம் அடைந்தன. அந்த கேம்பஸ் இன்டர்வியூ பெரிய அளவில் கடினமானதாக எல்லாம் இருக்காது. அடிப்படை தெரிந்திருந்தாலே அவர்கள் தேர்வாகி விடுவார்கள். பணியில் அமர்ந்த பிறகு அவர்களுக்கு நிறு வனமே வேலைக்கான பயிற்சியை அளிக்கும். உதாரணமாக, எலக்ட் ரானிக் பொறியியல் படித்த மாண வரை கூட அவரது படிப்புக்கு சம்பந்தமே இல்லாத ஐடி துறையில் அமர்த்தியதும் உண்டு.

இந்த நடைமுறை தான் கிட்டத் தட்ட கடந்த ஆண்டு வரை இருந்தது. இதனால் ஏராளமான பொறியியல் கல்லூரி மாணவர் களும், பிசிஏ, பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களும் அதிகள வில் ஐடி நிறுவனங்களில் பணி யில் சேர்ந்தனர். ஆனால், தற்போது ஐடி நிறு வனங்கள் தாங்கள் பணியமர்த்தும் நடைமுறையை முற்றிலுமாக மாற்றத் தொடங்கிவிட்டன என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயம். கடந்த ஆண்டு வரை கொத்து கொத்தாக மாணவர்களை அள்ளிய ஐடி நிறுவனங்கள், இப்போது கேம்பஸ் இன்டர் வியூ என்பதையே வெகுவாக குறைத்துவிட்டன. உதாரணமாக, கடந்த ஆண்டு அண்ணா பல் கலைக்கழகத்தில் 275 நிறுவனங் கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. ஆனால், இந்த ஆண்டு வெறும் 60 நிறுவனங்கள்தான் வந்திருந்தன. அதேபோல், பல கல்லூரிகளில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஐடி நிறு வனங்களே கேம்பஸ் இன்டர் வியூவை நடத்தியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், வழக்கத் திற்கு மாறாக இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மிகவும் கடின மாக இருந்ததாக மாணவர்கள் தெரி விக்கின்றனர். மேலும், கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லி யமாக பதிலளிக்கும் மாணவர் களுக்கு மட்டுமே வேலைக்கான அழைப்பு வந்திருக்கிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்ததுதான் ஐடி நிறுவனங்களின் இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கோடிங், டெஸ்டிங் உள்ளிட்ட அடிப்படை யான வேலைகளை எல்லாம் ஏஐ செய்துவிடுவதால் இந்த பணிகளுக்கு ஐடி நிறுவனங்கள் இந்த முறை ஆள் எடுக்கவில்லை என சில கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு போல் வேலைக்கு சட்டென ஆட்களை எடுத்து அவர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை ஐடி நிறுவனங்களுக்கு இப்போது இல்லை. எனவே, மிகவும் திறமையான மாண வர்களைத் தான் இப்போது ஐடி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கோட் குவாலிட்டி சிக்க ல்களை விரைவாக தீர்க்கும் திறமை, இன்டஸ்ட்ரி சர்ட்டிஃபிகே ஷன் படிப்பு ஆகிய தகுதிகளையே ஐடி நிறுவனங்கள் தற்போது எதிர்பார்க்கின்றன. அதேபோல், டேட்டாபேஸ் மேஜேன்மெண்ட், டேட்டா மைனிங், டேட்டா மாடல்லிங், ஸ்டேட்டிஸ்கல் அனா லிசிஸ் ஆகியவற்றில் நிபு ணத்துவம் இருக்க வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஐடி நிறுவனங்களின் தேர்வு முறை மாறிவிட்டதால், அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள பல பொறியியல் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. ஐடி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாண வர்களிடம் வளர்ப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் தங்களின் பழைய மாணவர்களை வரவழைத்து மாதிரி நேர்காணல் களை நடத்துவது, வேலைக்கு சென்றதற்கு பிறகு படிக்கும் சான்றிதழ் படிப்புகளை இப்போதே படிக்க அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் பல பொறியி யல் கல்லூரிகள் இறங்கிவிட்டன.