states

தீக்கதிர் விரைவு செய்திகள்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 22 பேர் காயம்!

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. மேற்கு துருக்கியில் அமைந்துள்ள டூஸ் நகருக்கு அருகே 5.9 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 22 பேர் காயம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் கோலியாகா மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது மற்றும் அதிகாலை 4.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 6.81 கிமீ  ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் தலைநகர் அங்காராவிலும் உணரப்பட்டுள்ளது.

மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றார்!

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி. ஆனந்த போஸ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில  அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில், சி.வி. ஆனந்த போஸூக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1977ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி யான போஸ், 2011இல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள தேசிய அருங்காட்சி யகத்தின் நிர்வாகியாக பணியாற்றினார்.

சிறுமியை பயன்படுத்தி மோடி பிரச்சாரம்: காங்கிரஸ் புகார்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  பிரதமர் மோடியின் அருகில் நின்றிருக்கும் சிறுமி ஒருவர் குஜராத்தி மொழியில் பாஜகவுக்கு  ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். பாஜக-வின் அடையாளச் சின்னத்து டன் கூடிய துப்பட்டாவை அணிந்தபடி ராமர் கோயில் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்தச் சிறுமி பேசுகிறார். பிரதமர் மோடி இதை ரசித்து கேட்டுவிட்டு, சிறுமி அணிந்திருந்த துப்பட்டாவில் தனது கையெழுத்து போட்டு வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரைக்கு சிறுமியை பயன்படுத்தியது விதிமீறல் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. 

அருணாச்சல், மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் புதன்கிழமை காலை 7:01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரி வித்துள்ளது. இதேபோன்று மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் அருகே புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளது.

மீரட்டை ‘நாதுராம் கோட்சே நகர்’ என மாற்றுவார்களாம்

“மீரட் உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கு தேவையான இடங்களை இந்து மகாசபை கைப்பற்றும் பட்சத்தில், மீரட் நகரின் பெயரை ‘நாதுராம் கோட்சே நகர்’ என மாற்றுவோம். மேலும், இஸ்லாமிய பெயர்கள் கொண்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை இந்து  தலைவர்களின் பெயர்களாக மாற்றுவோம்” என இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர்  பண்டித் அசோக் சர்மா கூறியுள்ளார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் மற்றும் இஸ்லா மிய அரசியலை தடுத்து நிறுத்துவோம்” என்று இந்து மகாசபையின் மீரட் மாவட்ட தலைவர் அபி ஷேக் அகர்வாலும் பேசியுள்ளார்.

ஷ்ரத்தா வாக்கர் படுகொலை ஒரு ‘லவ் ஜிகாத்’: அசாம் முதல்வர்

“தில்லியில் ‘லிவிங் டுகெதர்’ முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அபுதாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ‘லவ் ஜிகாத்’திற்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழா மல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட்டை பார்வையிட இஸ்ரோ அனுமதி

சென்னை, நவ.23- புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவ னமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26 ஆம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோ காஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணி களுக்கான கவுன்ட் டவுன் நவ. 25 ஆம்  தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வை யிட அனுமதி தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின்

சென்னை,நவ.23- திமுகவின் இளைஞரணி செயலாள ராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்,  மகளிர் அணித் தலைவராக விஜயா  தாயன்பன், மகளிர் அணி செயலாளராக  ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நிய மிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த கனிமொழி கருணாநிதிக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் அந்த பதவி  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  ஹெலன் டேவிட்சன்னுக்கு வழங்கப்பட் டுள்ளது.

எடப்பாடி  பழனிசாமி ஆளுநருடன் சந்திப்பு

சென்னை, நவ.23- சென்னை கிண்டியில் உள்ள ராஜ்ப வனில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி யுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்  முதல்வருமான எடப்பாடி பழனி சாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நத்தம்  விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகி யோரும் உடனிருந்தனர். சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.

4 நாட்கள் மிதமான  மழைக்கு வாய்ப்பு

சென்னை,நவ.23- தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய  தென் மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதி களை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழந்து. தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 24 ஆம்  தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

மயிலாடுதுறைக்கு மழை நிவாரணமாக ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு

சென்னை,நவ.23- வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும்  கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கனமழை  பெய்தது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி,  கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக  கனமழை பெய்தது. சீர்காழியில் 122 ஆண்டு களில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவானது. இதனால், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில்  மூழ்கின.  கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை  நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடு துறை, கடலூர் மாவட்டங்களில் நேரில் ஆய்வு  செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும்,  சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்க ளுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூ.1000 வழங்க அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சொந்தத் தடைகளையே மீறும் பிரிட்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி

லண்டன், நவ.23- உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததால் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளை  மீறி அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை பிரிட்டன் மேற்கொண்டதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொரு ளாதாரத் தடைகளை விதித்தன. இந்தத் தடை களால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடி யால் திணறிக் கொண்டிருக்கின்றன. அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக  உயர்ந்துள்ளன. பிரிட்டனும் இந்தத் தடைகளை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் சிக்கலைச் சந்தித்து வந்த பிரிட்டனில் கடந்த 41 ஆண்டுகளாக இல்லாத பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி  செய்வதில்லை என்று பிரிட்டன் அறிவித்திருந்தா லும் மார்ச் மாதத்தில் இருந்து எண்ணெய் வண்டி களின் போக்குவரத்து இருந்து வந்துள்ளது என்று சண்டே டைம்ஸ் செய்தி கூறுகிறது. ரஷ்யா வில் இருந்து 23 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான  எண்ணெய் ஒரு முறை இறக்குமதி ஆகியுள்ளது. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்து இதை  இறக்குமதி செய்ததாகக் கணக்குக்காட்டி யிருக்கிறார்கள். பல முறை சரக்குக் கப்பல்கள் பிரிட்டன் துறை முகங்களுக்கு வந்துள்ளன. ஜூன் மற்றும் ஜூலையில் மட்டும் 13 எண்ணெய் சரக்குக் கப்பல்கள் வந்துள்ளன. இவை எண்ணெய் ஏற்றிக் கொண்டு ரஷ்யாவில் இருந்துதான் வந்தி ருக்கின்றன. ஆனால், பிரிட்டனில் அதிகாரப்பூர்வ மாக புள்ளிவிபரங்களை பராமரிக்கும் பிரிட்டன்  தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் பதிவேடு களில் இந்த இரண்டு மாதங்களில் எந்தவித இறக்கு மதியும் ரஷ்யாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக விபரங்கள் இல்லை.

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நெய் ‘பொய்’

பாஜக எம்.பி.யே அம்பலப்படுத்தினார்

புதுதில்லி, நவ. 23 - கார்ப்பரேட் சாமியார்  பாபா  ராம்தேவின்   ‘பதஞ்சலி’ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நெய் போலியானது என பாஜக எம்.பி.  பிரிஜ் பூஷன் சரண் சிங் குற்றம்சாட்டி யுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கைசஞ்ச் தொகுதி எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாரபங்கி மாவட்டத்தில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, “நாமும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க தூய்மையான பால் மற்றும் நெய்யை உட்கொள்ள வேண்டும். நானும் எருமைகளை மேய்க்கச் செல்கிறேன். யோகா குருவின் (பாபா ராம்தேவ்) மிகப்பெரிய (பதஞ்சலி) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் நெய் போலியானது. நீங்கள் எருமைகள் மற்றும் மாடுகளை வளர்த்தால் தூய்மையான நெய்யும் பாலும் கிடைக்கும். இல்லை என்றால் போலியான நெய்தான் கிடைக்கும். நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள்தான் செல்வந்தர்கள். உடல்நலம் குன்றிய நபருக்கு குழந்தையும் உடல்நலம் குன்றிய நிலையில்தான் பிறக்கும். நல்ல உடல்நலத்தோடு இருக்க தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே பாலையும் நெய்யையும் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆயுர்வேதம் என்றும் முழுக்க முழுக்க இயற்கையாக தயாரிக்கப்பட்டது என  விளம்பரம் செய்யப்பட்டாலும், ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் தயாரிக்கும் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், அழகு சாதனப்  பொருட்களில் ரசாயன கலப்பட மும் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பதஞ்சலி பொருட் களுக்கு அவ்வப்போது தடைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக ஆதரவு சாமியாரான பாபா ராம்தேவ் குறித்து, பாஜக எம்.பி. ஒருவரே, “போலி  நெய் தயாரிக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.