இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்
சென்னை,ஏப்.20- மகேந்திரகிரியில்உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதன் இயக்குநருக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதி யுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் (இஸ்ரோ), இரண்டு பணி நியமன அறிவிக்கைகளைவெளியிட்டு எழுத்துத் தேர்வுகளை கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவிலிலும் நடத்தி யுள்ளது. அது “சி” பிரிவு,“பி” பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும். அவை அனைத்துமே சாதாரண நிலை யில் இருந்துபணியாற்றும் ஊழியர்களுக்கான தேர்வு. எழுத்துத் தேர்வில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. லகுரக வாகன ஓட்டுநர்,சமையலர் பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றி ருந்தது. மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி/ ஆங்கிலத்தில்மட்டுமே இருந்தன. பொருத்துபவர் (Fitter), பற்ற வைப்பவர் (Welder) போன்ற பதவிகளும் அதில் அடக்கம். பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு முடித்த வர்களே. தமிழ் வழிக் கல்வியில் வந்தவர்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள். எழுத்துத் தேர்வில் தமிழ் புறக் கணிப்பு என்பது தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இழைக்க ப்பட்ட அப்பட்டமானபாரபட்சம்... அநீதி. இது அவர்களுக்குசமதள போட்டிச் சூழலையும் மறுப்பது ஆகும். இது சரி செய்யப்பட வேண்டும். எனவே தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.