states

ஹிஜாப் அணியத் தடையா? பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,ஆக.23 ஹிஜாப் அணிய தடை விதித்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து  மேடையின் ஒருங்கி ணைப்பளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தட்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வு கள் நடந்தன. தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்கத் தடையுள்ளது எனும் ஒன்றிய நிதி அமைச்சரின் பேச்சு பச்சைப் பொய் என்பதை இதன் மூலம் உணரலாம். விரும்புகிறவர்கள் ஹிந்தி படிக்க இங்கு  வசதி உள்ளது என்பதே உண்மை. அப்படி ஹிந்தி படித்து தேர்வு எழுதச் சென்ற பெண்ணை அந்தப் பள்ளி நிர்வாகம் தடுத்த அநியாயம் நடந்துள் ளது. அதற்கான காரணம் அந்த முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்தி ருந்தார் என்பது. கேள்வித்தாள் பெற்று  தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஷபானா எனும் அந்தப் பெண்ணை ஹிஜாபை கழட்டிவிட்டு வருமாறு தேர்வு கண்காணிப்பாளரும், பள்ளி முதல் வரும் கட்டாயப்படுத்தியிருக்கி றார்கள்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தேர்வு எழுதாமல் சென்றி ருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழக  மக்கள் ஒற்றுமை மேடை வன்மை யாகக் கண்டிக்கிறது. எத்தகைய உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதில் பள்ளி நிர்வாகம் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் மதவெறுப்புச் சிந்தனை இந்தப் பள்ளி நிர்வாகத்தின் சிந்த னைக்குள் புகுந்திருக்கிறது. அதன் காரணமாகவே இத்தகைய நட வடிக்கையை அது எடுத்திருக்கிறது. இந்த அடாவடிச் செயலுக்காக அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேடை வலியுறுத் துகிறது.  வகுப்புகளில் மட்டுமல்லாது தேர்வு களிலும் ஹிஜாப் அணிவதைத் தடுக்க கூடாது என்று அனைத்துப் பள்ளி களுக்கும் தமிழ்நாடு அரசு கறாரான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்; அதை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களின் கல்வி மோசமாக பாதிக்கப்படும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோது என்ன நடந்தது என்பதை அறிவோம். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கெட்ட பெயரை உரு வாக்க வேண்டும் என்று இப்படிச் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் நடக்கக் கூடும். அவர்களைக் கண்டித்து வைப்பது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது மக்கள் ஒற்றுமை மேடை.    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.