புதுதில்லி, அக். 26 - ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த, ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக வேலைசெய்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் நாடு முழு வதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர் பான, இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, குடி யரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு, செப்டம்பர் 23 அன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது, அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட ஆணை யத்தின் கருத்துக்களை கேட்க முடிவுசெய்தது. இதன்படி சட்ட ஆணையத்தின் தலை வரும் முன்னாள் நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, சட்ட ஆணைய உறுப்பினர் களுடன் ராம்நாத் கோவிந்தை புதனன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை யடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 22ஆவது சட்ட ஆணையம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது. சட்ட ஆணையத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்கவும் உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், தோதான ஒரு தேதியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தவும் அதில் பங்கேற்க அர சியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு, அந்த அழைப்பிதழில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆகஸ்டில், நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான 21- ஆவது இந்திய சட்ட ஆணையம், தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தி யமில்லை என்று ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.