states

வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச் சொல்வோம்

சென்னை, நவ. 16- மாணவி பிரியா மரணத்தில் இந்த  அரசு உண்மையை உரக்கச்சொல் வோம் என்றும், ஓரிரு நாட்களில் அறி க்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் முத்து மாரியம்மன் கோயில் அருகே நீர் வழி தடங்கள் அருகாமையில் வசிப்ப வர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசுவ லைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவி பிரியா உயிரி ழந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ  குழுவின் அறிக்கையை வைத்து தான் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மாணவி பிரியா விவகாரத்தில் அரசியலுக்காக பேசப்படும் வார்த்தைகளுக்கு தான் பதில் கூற விரும்பவில்லை என்றார். குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து உயிர்  விபத்து ஏற்பட்டபோது, ஒப்பந்ததாரர் இது கடவுள் விதி என்று கூறினார். அதுபோல் நாங்கள் கூற மாட்டோம். மருத்துவர்களின் கவனக் குறைவு என்பதை நேரடியாக ஒத்துக் கொண் டுள்ளோம் என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பாஜகவை போல் நாங்கள் தப்பித் துச் செல்ல மாட்டோம். உண்மையை உரக்கச்சொல்லி என்ன நடந்தது என்பதை ஊருக்கு தெரிய வைப்போம் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கை கிடைக்கும் என்றும் தெரி வித்தார். இனி தமிழ்நாட்டில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க  மருத்துவர்கள் மாநாட்டில் முதல மைச்சர் பேசியுள்ளார். அதில் மருத்து வர்கள் இருக்கும் துறை குறை இல்லாத  துறையாக இருக்க வேண்டும். ஒரு  சில குறைகள் இருந்தாலும் அதையும்  இல்லாத அளவுக்கு சரி செய்யப்படும்  என முதலமைச்சரும், தானும் மாநாட் டில் மருத்துவர்களுக்கு தெரிவித்துள் ளோம் என அமைச்சர் கூறினார்.