states

அதிமுகவில் ஒற்றை தலைமையோ, இரட்டைத் தலைமையோ... தமிழக மக்களுக்கு என்ன பலன்?

மதுரை, ஜூன் 29 - மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதி ரின் வைர விழா புதனன்று  நடை பெற்றது. விழாவில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி பத்திரிகை சுதந்தி ரத்தை காலில் போட்டு மிதிக்கிறார். பாஜகவுக்கு பத்திரிகை சுதந்திரம் குறித்து பேச தகுதியில்லை.  8 ஆண்டுகளில் பாஜக மக்களை ஏமாற்றி உள்ளது. மீதமுள்ள 2 ஆண்டு களில் என்ன செய்ய போகிறார்கள் என மக்களுக்கு அச்சம் உண்டாகி உள்ளது, 8 ஆண்டுகளில் ஏராளமான தொழில்கள் முடக்கப்பட்டு உள்ளன. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்  தொகை, ஆசிரியர் - அரசு ஊழியர் களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 13 ஆயிரம் தற் காலிக ஆசிரியர் பணியை நிரந்தர பணி யிடமாக நிரப்ப வேண்டும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை, அதிமுக மக்களை பற்றி சிந்திக்கவில்லை. அதிமுக ஒற்றை தலைமையாக இருந்தாலும், இரட்டை தலைமையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.  தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்பது அண்ணாமலைக்கே தெரியும். ஆனால்  வெற்றி பெறும் என்ற மாயத்தோற்றத்தை அண்ணா மலை உருவாக்க முயல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.