சென்னை, மே 24- “கெரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங் களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது” என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தி யுள்ளார் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைய ளிப்பது குறித்து மருத்து வர்களுக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சிறப்பு பயிற்சியளிக்கப் படுகிறது. இந்தப் பயிற்சியை ஆய்வு செய்த பிறகு செய்தி யாளர்களிடம் சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது 87 பேர் மட்டுமே டெங்கு பாதித்து சிகிச்சையில் உள்ள னர். சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலாக இருந்து வருகி றது. அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் தொற்று பரவி யுள்ளது. ஒமைக்ரான் வகையில் பல உட்பிரிவு தொற்று வகைகள் உள்ளது. எனவே, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மிக அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூ சியை செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 97 விழுக்காட்டில் முதல் தவணை தடுப்பூசியும், 81 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 43.96 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அடையாறு, தேனாம் பேட்டை பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகி றது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட் டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல், கவனமுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.