states

img

கொரோனா சிகிச்சை பெற்ற 20 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு பணம் வழங்க வலியுறுத்தல்

மதுரை, ஏப்.26- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற்ற ஓய்வூதியர்கள் 20 ஆயிரம் மனுக் கள் நிலுவையில் உள்ளது. அதை தமிழக அரசு பரிசீலித்து அதற்கான தொகையை வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அளித்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில் 70 வயது நிறைவடைநத ஓய்வூதி யர்களுக்கு பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்து ணவு-அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.7,500 வழங்க வேண்டும். மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டு மென வலியுறுததி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மதுரை, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, மேலூர், பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளா ளர் என்.ஜெயச்சந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.தங்கவேல். மு. மகாலிங்கம். எஸ்.திருவேங்கடராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநி லப் பொருளாளர் என்.ஜெயச்சந்தி ரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவலர் செந்தில்குமார், அவரது பேச்சை இடைமறித்து அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது. உங்கள் மீது வழக்குத் தொடருவேன் என  அச்சுறுத்தினார். இதனை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்-ஆசிரி யர்கள் கண்டித்தனர்.