states

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

சென்னை மே 10- தமிழ்நாடு சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர்கள் உதயசூரியன், க.சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப் படுகிறது. நீர்நிலை மற்றும் அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த 10  ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டுள்ள மின் இணைப்பு வழங்கும் பணியை  மீண்டும் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து வருவாய்த்துறை யுடன் கலந்து ஆலோசித்து உரிய வழி முறைகளை உருவாக்கி நீர்நிலை புறம்போக்கு நிலங்களிலும் குடியிருப்போருக்கு மின் இணைப்பு  வழங்குவது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என்றார். பண்ருட்டி தொகுதி உறுப்பினர் வேல்முருகன் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் இது வரை யாரெல்லாம் இலவச மின்சாரம் பெறவில்லையோ அவர்களுக்கும் ஒரு முறை இலவச மின்சாரம் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.