states

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி!

புதுதில்லி, ஜூன் 13 - நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் சுமார்  5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரி கள் விசாரணை நடத்தினர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அம லாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்புக்கு மருத்து வமனையில் சிகிச்சை எடுத்து வருவ தால், சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனினும், ராகுல் காந்தி (51) திங்களன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் முற்பகல் 11.25 மணியளவில் விசார ணைக்கு ஆஜரானார்.  அவரிடம் உதவி இயக்குநர் அந்தஸ்திலான அமலாக்கத்துறை அதிகாரி கேள்விகளை கேட்டார். விசாரணைக்கு முன்பு, சொல்வதெல்  லாம் உண்மை என்று ராகுல் காந்தி யுடம் உறுதிமொழியும் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியிடம் சுமார் மூன்றரை மணி நேரம் அமலாக்கத்துறையின்ர விசாரணை நடத்தினர். 

உணவு இடைவேளையின் போது, தில்லி சர் கங்கா ராம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாயார் சோனியா காந்தியை, தனது  சகோதரி பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று சந்தித்த ராகுல்  காந்தி, பிற்பகலில் மீண்டும் அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தினர். முன்னதாக, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு அரசியல் பழிவாங்கலுக்கும், சொந்த ஆதா யத்திற்கும் பயன்படுத்துவதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலை மை அலுவலகம் முதல் அமலாக்கத் துறை அலுவலகம் வரை சத்தியா கிரக பேரணி நடத்துவதாக அறிவித் திருந்தனர். 

இதையொட்டி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர்  முதல்வர் பூபேஷ் பாகேல், மத்திய முன்னாள் அமைச்சர்கள் திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ராகுல்  காந்தி, அமலாக்கத்துறை அலுவல கம் வரை பேரணியாக சென்றார். வழி நெடுகிலும், காங்கிரஸ் கட்சியினர் ஆர்எஸ்எஸ் - பாஜகவை விமர்சிக்கும் பேனர்களை தூக்கிப் பிடித்தபடியே சென்றனர். “நான் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி” ; “மோடி, ஷா.. நான்  ராகுல் காந்தி, தலைவணங்கமாட் டேன்” என்றும், “உண்மை வெல்லும்” என்றும் அந்த பேனர்களில் எழுதப் பட்டிருந்தன.