states

மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1019 கோடி

சென்னை, ஏப்.30- தமிழ்நாட்டில் புதிதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அமைக்கவும், 18 மருத்துவ மனைகளில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும்  ரூபாய் 1019 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.பின் னர் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தமிழ்நாட்டில் அரசு மாவட்டத் தலைமை  மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்க ளில் மக்கள் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க புதிதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அமைக்  கப்படும். ஜெயங்கொண்டம், தாம்பரம்,பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரணியம், ராசிபுரம், அறந்தாங்கி, பர மக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர்,  திருப்  பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டி வனம், அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்து வமனைகளாக தரம் உயர்த்தப்படும். தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்தி ரம், ராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்து வமனைகளின் கட்டமைப்புகள் மாவட்ட மருத்து வமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

ஆய்வகங்கள்...

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர், திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை (செய்யார்) ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ. 15 கோடியில் புதிய தாக ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்க ப்படும். பரமக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னார் குடி, கும்பகோணம், சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள் ஓமந்தூரார் அரசு பன்னோ க்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய பத்து இடங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா, நிபா உள்ளிட்ட வைரஸ் காய்ச் சல்களை கண்டறிய ரூ. 12 கோடி செலவில் புதிதாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு தாலுகா மருத்துவமனைக்கு ரூ. 10 கோடியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்படும். தென்காசி மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருப்பூர்  மாவட்டம் வேலம்பாளையம், நெல்லை மாவட்டம் கண்டிகைபேரி, சேலம் மாவட்டம்  அம்மாபேட்டை ஆகிய நகர்புற மருத்துவ மனைகளுக்கு நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். வந்தவாசி, செய்யூர் அரசு வட்ட மருத்து வமனைகள் தரம் உயர்த்தப்படும். சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகர் கொல்லி மலை கோத்தகிரி ஆகிய அரசு மருத்துவமனை களில் கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் ரத்த  வங்கிகள் அமைக்கப்படும். நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதிதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கப்படும்.

ரூ.125 கோடியில்  உயர் சிறப்பு சிகிச்சை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை யில் சிறப்பு சிகிச்சை வழங்க 125 கோடி செலவில் புதிய கட்ட டம் மற்றும் கருவிகள் வழங்கப்படும். கோவை,  மதுரை, கீழ்ப்பாக்கம் ஆகிய அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை களுக்கு ரூ. 110  கோடியில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள்  வழங்கப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக  நவீன உபகரணங்களுடன் புதிதாக நரம்பியல் பிரிவு கட்டடம் ரூ.65 கோடியில் கட்டப்படும்.

தீவிர சிகிச்சை பிரிவுக்கு  ரூ.238 கோடி

இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தை மேலும் வலுப்படுத்த செங்கற் பட்டு, தருமபுரி, திருவள்ளூர், தஞ்சாவூர், திரு வாரூர், நெல்லை, சிவகங்கை ஆகிய 6 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளி லும் ஒட்டச்சத்திரம், சீர்காழி, மேலூர், ஊத்தங்  கரை ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளி லும் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர  சிகிச்சைப் பிரிவு 231 கோடி ரூபாயில் நிறுவப் படும். இத்திட்டத்தின் கீழ் சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு  வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை புதிதாக ரூ.60 கோடி யில் அமைக்கப்படும்.

சுகாதார நிலையங்களுக்கு  ரூ.248 கோடி

தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தி வழங்கிடமுதல்கட்டமாக 178 வட்டார  ஆரம்ப  சுகாதார நிலையங்கள் ரூ.144 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மேலும் வாடகை கட்டடங்க ளில் இயங்கி வரும் 316 துணை சுகாதார நிலை யங்களுக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.424 கோடியில் ஆய்வக சேவைகள்!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எங்கும் குழந்தைகள் நல ஆராய்ச்சி மைய மாக 400 படுக்கை வசதிகளுடன் ஒருங்கி ணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையமாக ரூ.20 கோடியில் மேம்படுத்தப் படும். தாய் சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆர்.எஸ்.புரம் மகப்பேறு மருத்துவமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசுகஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தாய்சேய் நல ஒப்புயர்வு மையங்களுக்கு கூடுதல் கட்ட டங்கள் கட்டப்படும். 

புற்றுநோய் சிகிச்சை பிரிவு!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.46 கோடி செலவில் புதிதாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஒன்று உயர்வு உபகரணங்களுடன் நிறுவப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு நவீன அல்ட்ரா சவுண்ட் கருவிகள் வழங்கப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கோவை சேலம் ஆகிய மாவட்டங்களில் அவசர சிகிச்சை மீட்பு மையங்கள் விரிவுபடுத்தப்படும்.

நாமக்கல்லில் சித்த மருத்துவமனை...

நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட முழு மையான சித்த மருத்துவமனை ஏற்படுத் தப்படும். மூலிகைப்பயிர்கள் வளர்ப்பில் விவ சாயிகள் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். தமிழகத்தில் மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில  மூலிகை தாவர வாரியம் மற்றும் வேடசந்தூரில் உள்ள மத்திய விவசாய ஆராய்ச்சி நிலைய  உதவியுடன் முதற்கட்டமாக திண்டுக்கல்  மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில்  அஸ்வகந்தா பயிர் சாகுபடி செய்யப்படும். பதிவுபெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 3000 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.