பாகிஸ்தானில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில், உணவு விநியோக மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம் குர்தா ஸ்பூரில் சாலைத் திட்டங் களுக்காக கையகப்படு த்தப்பட்ட நிலங்களுக்கு நியாயமான இழப்பீடும், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உள்ள படாலா ரயில் நிலையத்தில் விவ சாயிகள் திரளாக போராடி னர். இந்த போராட்டத் தால் திங்களன்று 5-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் கள் ரத்துசெய்யப்பட்டன.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயற்சி செய்த 4 இந்தி யர்கள் செயின்ட் லார ன்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப் பட்ட 4 பேரும் குஜராத் தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஆவர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீ ஸில் அதிக விபத்து கார ணமாக வாடகை மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய பொதுமக்களி டையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 89% பாரீஸ் நகரவாசிகள் வாட கை மின்சார ஸ்கூட்டர் களை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்த னர்.
தெலுங்கானாவில் நடந்த நிகழ்வு என ஒரு வீடி யோவை பதிவிட்டுகல வரம் தூண்டும் விதமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட இந்து முன்னணி நிர்வாகி இளங்கோ மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விரைவில் குற்றப்பத்திரி கை தாக்கல் செய்யப் படும் என தெரிவித்துள் ளனர்.
முக்கிய கோவில்களில் கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசிக்க நட வடிக்கை எடுக்கவேண் டும். கோவில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் தரிசிக்க தனி வரிசை கோரி தொடு க்கப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 12 வாரங் களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பிரபல உணவு (பர்கர்) தயாரிப்பு நிறுவனமான மெக்டொனால்ட், ஊழி யர் பணிநீக்க நோக்கத்து டன் தனது அமெரிக்க அலுவலகங்களை தற் காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினத் தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறி வித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள பிரபல சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சிறுபான்மையினர் அதிகம் பகுதிகளில் பாஜகவினர் ஆயுதங்களுடன் அனுமதி யின்றி பேரணிகளை வேண்டுமென்றே நடத்தி வருகின்றனர். ஹூக்ளி மாவட்ட வன்முறைக்கு முன்னதாக பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி கலவரத்தைத் தூண்டிவிட்டு வெளியேறியனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதி கரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
சிவகங்கையில் அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்துள்ளது. திங்களன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 சரிந்து, 44 ஆயிரத்து 280 ரூபாயாக குறைந்துள் ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 60 பைசா குறைந்து, 77 ரூபாய் 10 பைசாவாக விற்பனையா கியது.
உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் உறுதி தன்மைக்கு இறுகி, பிணைந்த நிலையிலான “ஸ்பைக்” வகை புரதங்களே காரணம் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
உலகச் செய்திகள்
சிரியாவில் இருந்து ஒரு உயர்மட்டக்குழு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்துள்ளது. அங்கு நான்கு நாடுகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இந்தக்குழு அங்கு விரைந்துள்ளது. ரஷ்யா, ஈரான், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் குழுக்களுடன் தனித்தனியாக இருதரப்பு விவாதங்களும் நடக்கும் என்று சிரியாவின் வெளியுறவுத் துறை துணையமைச்சர் அய்மான் சூசன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் வியட்நாமின் பொருளாதாரம் 6.6 விழுக்காடு அளவுக்கு வளரும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சியையும், அதை அடிப்படையாக வைத்து நடப்பாண்டுக் கான கணிப்பையும் தனது அறிக்கையில் அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. உற்பத்தித்துறை, குறிப்பாக மின்னணுப் பொருட்கள், எந்திரங்கள், ஜவுளி மற்றும் காலணிகள் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீடு அதிகமாக வரும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்கப் போர் விமானம் ஒன்றை எச்சரிக்கை செய்து ஈரான் கடற்படைப் பிரிவு விரட்டியடித்திருக்கிறது.ஓமன் கடற்பகுதியில் இந்த விமானம் தென்பட்ட உடன், ஈரான் கடற்படைப் பிரிவு துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது. தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்ததோடு, அவற்றையும் மீறி ஈரானின் எல்லைப்பகுதிக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றதால் அமெரிக்கப் போர் விமானம் திரும்பி ஓடியிருக்கிறது.