சென்னை,ஏப்.19- தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் புதிய அறி விப்புகளை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு,“ தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படு கிறது. மாநில அளவில் முதலீட்டு ஊக்க விப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூ. 1,800 கோடி யில் 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப் படும். அதேபோன்று ரூ.1000 கோடியில் தொழிலக வீட்டு வசதி திட்டம் ஒன்று செயல் படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.500 கோடியில் பல்துறை தொழிற்பூங்கா ஒன்று உருவாக்கப்படும். தஞ்சாவூர் மற்றும் உதகமண்டலத்தில் ரூ.70 கோடியில் மினி டைடல் பூங்கா அமைக் கப்படும். ஸ்ரீபெரும்பதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் வணிக வளாகம் மற்றும் உணவ கம் தனியார் பங்களிப்புடன் ரூ. 7 கோடியில் அமைக்கப்படும். சுற்றுச்சூழ லின் தரத்தை மேம்படுத்த கொள்கை 2022 வெளியிடப்படும். கனிமக் கடத்தலை தடுக்க வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கரு வியை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் அதிவேக ரயில் தடத்தை அடையாளம் காண்பதற் கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப் படும்.
எப்போது முடியும்?
தமிழ்நாடு பாதுகாப்பு தொழிலக வழித்தடத்தின் ஒரு பகுதியாக வானூர்தி மையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள வானூர்தி தொழில் பூங்காவின் அமை விடத்தில் சிப்காட் நிறுவனம் நிறுவி வருகி றது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்க ளுக்கான உயர் கணினி மற்றும் பொறியி யல் வடிவமைப்பு மையம், வானூர்தி மின்னணுவியல் உதிரி பாகங்கள், உற்பத்தி வளாகம், பரிசோதித்து சான்றிதழ் வழங்கும் வசதி, பொது சேமிப்பு கிடங்கு, திறன்மிகு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் போன்ற வசதிகளைக் கொண்ட தாக அமையும். மேலும், இத்திட்டம் இரண்டு கட்டங்க ளாக செயல்படுத்தப்பட்டு வருவகிறது. முதற்கட்ட பணிகள் சுமார் ரூ. 230 கோடிசெல வில் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் சென்னை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி பிப்ரவரி 2023க்குள் பணிகள் நிறை வடையும்.
விமான சேவை...
நெய்வேலி விமான நிலையத்தில் விமானங்கள் இயக்குவதற்கான உள்கட்ட மைப்பு வசதிகள் தயாராக உள்ளன விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் உரிமம் எதிர்பார்க்கப்படுகிறது இவ்வி மான நிலையத்தில் இருந்து விமானங்கள் விரைவில் இயக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.