states

தமிழகம் முழுவதும் நாளை இந்திய மாணவர் சங்கம் ரயில் மறியல்

சென்னை, ஜூன் 20- அக்னி பாதை திட்டத்தையும் இத் திட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது வன்  முறை மற்றும் கைது நடவடிக்கையை யும் திரும்பப் பெறக் கோரி நாளை தமி ழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்  டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செய லாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய மோடி அரசின் மக்கள்  விரோத நடவடிக்கையின் தொடர்ச்சி யாக இந்திய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் அக்னி பாதை  திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த  அக்னி பாதை திட்டமானது இந்திய தேசத்தின் இராணுவத்தை ஒப்பந்த முறையில் மாற்றுவதற்கான ஏற்பாடா கும். ஆர்எஸ்எஸ்மயமாக இராணு வத்தை மாற்றுவதற்கான திட்டமே ஆகும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரியளவில் உயர்ந்துள்ளது.

வறுமை வேகமாக அதிகரிக்கிறது. தற்  போது இராணுவ பணியையும் நிரந்தர மற்றதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்  ளது பல மாநிலங்களில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தேசப்பற்று மிக்க இளைஞர்களும், மாணவர்களும்  களத்தில் இறங்கி போராடி வருகிறார் கள் . தில்லியில் போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய  மாணவர் சங்கத்தினரின் அகில இந்திய தலைவர்களை கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் கைதும் செய்துள்ளது. இதை வன்மையாக  கண்டிப்பதோடு வருகிற ஜூன் 22 ஆம்  தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் இரயில் நிலையங்களை முற்று கையிட்டு போராட்டம் நடத்த அறை கூவல் விடுக்கிறது. இந்த போராட்டத்  தில் தமிழகத்தின் அனைத்து முற் போக்கு சக்திகளும், ஜனநாயக இயக்  கங்களும் மாணவர்களும் இளைஞர் களும் திரளாக பங்கேற்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.