எலான் மஸ்க்கால் டுவிட் டரில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு மத்தி யில் இந்திய மொழி களைக் கொண்டு இயங் கும் ‘கூ’ செயலிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பயனர்களின் எண்ணி க்கை மிக வேகமாக அதி கரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபரா தத்தை அதிகரித்து பிறப் பிக்கப்பட்ட அரசாணை யை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் முறையான சாலை யை ஏற்படுத்திக் கொடு க்க வேண்டும் என மனு வில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்திருந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் டிசம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு செ ன்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி யில் சூதாட்டம் நடை பெற்றதாக தோனி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தவர் ஐபிஎஸ் அதி காரி சம்பத் குமார்ஆவார்.
தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 700 கம்பெனிகள், பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய பிரிவு களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் என மொத்தம் 70,000 பேர் கொண்ட ஆயுதப் படை வீரர்கள் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பாது காப்புக்கு செல்கின்றனர்.
மகாராஷ்டிராவின் சோர ம்பா ஃபாடா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் சிவசேனா (உத்தவ்) கட்சியின் இளம் தலைவரும், எம் எல்ஏ-வுமான ஆதித்யா தாக்கரே கலந்துகொண் டார்.
மும்பை விமானநிலை யத்தில் வெளிநாட்டு பயணி ஒருவரிடம் 4.98 கிலோ ஹெராயின் பறி முதல் செய்யப்பட்டுள் ளது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி என மும்பை வரு வாய் புலனாய்வு இயக்கு நரக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பாஜக ஆளும் கர்நாடகா வில் 545 காவல்துறை பணியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட தேர்வில் முறை கேடு மற்றும் ஊழல் நட ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விசா ரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.