இந்தியாவின் ஏற்றுமதிகள் கடந்த ஆகஸ்ட் மாத கணக்கீடுகளின்படி 6.9 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு 24.16 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் மோடி அரசின் அதிகாரிகள், இது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் சாதக மான விளைவுதான் என்று மார்தட்டு கிறார்கள். எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஏற்றுமதி அதிகரிக்க க்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தியாவின் பல்வேறு தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி பற்றி படாடோப பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி அரசு, இந்த நிலைமையை சரி செய்வதற்கு உருப்படியான எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை; ஏற்றுமதி வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்களை மறைக்கிறது.