states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு, 20 ஆம் தேதி 12 ஆம்  வகுப்பு, 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும். திறப்பில்  எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

கோவாக்சின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ப வர்களுக்கு பூஸ்டர் (மூன்றாவது தவணை) தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. 

கான்பூரில் நடைபெற்ற உத்தரப் பிரதேச வணிகர் கூட்டமைப்பின் 90-ஆவது ஆண்டு விழாவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு வர்த்தக நிறு வனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை பகுதி யில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவ மைத்து ஞாயிறன்று யோகா கலைஞர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொலம்பியாவின் இரண்டு அரசியல் கட்சிகள் இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்துள் ளன. பாப்புலர் கொலம்பியா மற்றும் சுயேச்சையான சமூகக் கூட்ட மைப்பு ஆகிய இரண்டு கட்சிகளும், ‘‘பெரிய பொறுப்புடன், அரசியல் புரிதலோடு கொலம்பிய மக்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்று மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறாததால், ஜூன் 19 அன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பல்வேறு மனித உரிமை மீறல்களைச் செய்து வரும் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தி ருக்கிறார்கள். சவூதி அரேபியாவுக்குச் செல்லும் ஜோ பைடன், இஸ்ரே லுக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.

துர்க்கியே நாட்டின் பணவீக்கம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 73 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இல்லாத நெருக்கடியை துர்க்கியே சந்திக்கிறது. போக்குவரத்து, உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய வற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 1998 ஆம் ஆண்டில் சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட சில சிக்கல்களால் விலைவாசி கடுமை யாக உயர்ந்தது. அதற்குப் பின் தற்போதுதான் இவ்வளவு நெருக்க டியை துர்க்கியே சந்திக்கிறது.