states

14 வகை பயிர்களின் ஆதார விலை உயர்வு!

நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர் களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை  ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது.  இதேபோல எள்ளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 523,  பாசிப் பருப்புக்கு குவிண்டா லுக்கு ரூ. 480, சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.  385 என விலை உயர்த்தப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.