திருவண்ணாமலை, நவ.3- திருவண்ணாமலை நகரத்தில் இருந்து எட்டு கிமீ தொலைவில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழ மை காலை 6.30 மணிக்கு, புகுந்த வருமான வரித்துறையினர், சிஆர்பிஎப் காவலர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். இதுதவிர கரூரில் அமைச்சர் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர் களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை குறித்த தகவல் பரவியதையடுத்து, ஏராளமான திமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் எ.வ.வேலுவின் வீட்டின் முன்பு திரண்ட னர். வருமானவரித் துறையின் நட வடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஒன்றிய அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். கரூரில் குறைந்தது நான்கு இடங்களில் சோத னை நடைபெற்றதாக தகவல்கள் தெரி விக்கின்றன. காந்தி நகரில் உள்ள அமைச்சரின் தனி உதவியாளர் சுரே ஷின் வீடு, திமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, பெரியார் நகரில் உள்ள ஒரு நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.