புதுதில்லி, ஜூலை 28 - ஆசிரியர் நியமனத்தில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலை யில், அவரை தற்போது மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கி, முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். மேற்கு வங்க மாநில வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 வரை மாநில கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது, ஆசிரி யர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடை பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந் தன. இதுகுறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச் சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக் தலா பகுதியில் உள்ள அமைச்சர் பார்த்தா வின் வீட்டில் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற் றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடை யது என தகவல் வெளியானது. இத னைத் தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 23-ஆம் தேதி மாலை கைது செய்த னர். அமைச்சரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, பெல்காரியா என்ற இடத்தில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டிலும் புதன்கிழமை ன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 18 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய் யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறி முதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ. 4 கோடியாகும். பறிமுதல் செய்யப் பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி-யின் வீடுகளில் இருந்து ரூ. 50 கோடி அள விற்கு பணம், நகை கைப்பற்றப்பட்டது. மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் அர சுக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இத னால், பிரச்சனையிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ள பார்த்தா சாட்டர்ஜி மீது நடவடிக்கை எடுக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தயாரானார். முன்னோட்டமாக, “பார்த்தா சாட்டர்ஜி அனைத்துப் பதவிகளிலும் இருந்தும் நீக்கப்பட வேண்டும். கட்சியின் அடிப் படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கூட விலக்கப்பட வேண்டும்” கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியை மேற்குவங்க அமைச்சர வையிலிருந்து நீக்கி மம்தா பானர்ஜி நட வடிக்கை எடுத்துள்ளார்.