states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

காஷ்மீரில் உள்ள லடாக் - கார்கில் மலை கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை பெற்றது. அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை துண்டாக உடைத்து, அதன் மூலம் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக பாஜக கூறி வந்த பொய்களுக்கு லடாக் - கார்கில் மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போதே லடாக் மக்கள் வலுவான குரல் எழுப்பினார்கள். இப்போது  நடந்து முடிந்துள்ள தேர்தலில், மாநிலத்தை பிரித்ததன் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிரதேசங்கள் எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை என்பதை லடாக் மக்களே தங்களது வாக்குகளின் மூலம் அம்பலப்படுத்திவிட்டார்கள். பாஜகவின் பொய்ப்பிரச்சாரத்தை லடாக் - கார்கில் மக்கள் சவக்குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள். தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரசுக்கு பாராட்டுகள்.