புதுதில்லி, ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மத்தியப் பிரதேசம், பீகார், மகா ராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்று பல மாநிலங்களில் ராம நவமியின்போது நடைபெற்ற ஊர்வலங்களில் மதவெறி வன்முறை வெறி யாட்டங்கள் நடைபெற்றிருப்பது ஆழ்ந்து கவலை யளிக்கும் விஷயமாகும். மதப் பண்டிகை நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு, ஆயுதம் தாங்கிய குண்டர்கள் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள் வழியே ஊர்வலம் செல்லும் போது ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்றதாகவும் இதனைத்தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் கல்லெறி சம்ப வங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக் கின்றன.
கார்கோன் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது, முன்பு தலைநகரில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற சமயத்தில் வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்த பாஜக தலைவரான கபில் ஷர்மா என்பவர் இருந்துள்ளார் என்பது தற்செயலான ஒன்றல்ல. இதேபோன்றே பீகாரில் காவல்துறையினரின் முன்னிலையிலேயே மசூதி ஒன்றில் காவிக் கொடி நடப்பட்டிருக்கும் மிகவும் ஆட்சேபகரமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. தில்லியில், ஜேஎன்யு வளாகத்தில் ஏபிவிபி-யுடன் இணைந்த சங் பரிவாரக் கும்பல் ராம நவமி என்ற பெயரில், விடுதி கேன்டீனில் அசைவ உணவு பரிமாறக்கூடாது என உணவு விடுதி ஊழியர்களைத் தடுத்து தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இதனைத் தடுத்து, அவர்களைக் காப்பாற்ற வந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி களில் உரிய தயாரிப்புப் பணிகள் இல்லாமல் இவர் களை ஊர்வலமாகச் செல்ல அனுமதித்திருப்ப தில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதலாக, மத்தியப் பிரதேசத்தில் சிறுபான்மை யினத்தவர்களின் சொத்துக்கள், அவர்களைக் “கலகக்காரர்கள்” எனக் குற்றம்சாட்டப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மதவெறி வன்முறைக்கு ஆட்சியாளரின் அரவணைப்பு இவையனைத்தும் நாட்டின் சட்டத்தையும், அரசமைப்புச்சட்டத்தையும் இடித்துத் தரைமட்ட மாக்கும் செயல்களே தவிர வேறல்ல. இச்சம்பவ ங்கள் ஏழு மாநிலங்களில் நடைபெற்றுள்ளபோதிலும் இந்தச் சம்பவங்கள் குறித்து எதுவும் கூறாமல் பிரதமர் மவுனம் சாதிப்பதிலிருந்து, இந்தச் சம்பவங் களுக்கு ஆட்சியாளர்களின் அரவணைப்பும் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆர்எஸ்எஸ் சங் பரிவாரக்கும்பல்களால் தங்களின் மதவெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காக மதப் பண்டிகைகள் பயன்படுத்தப் படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக் கிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த விரும்பும், இவர்களின் இத்தீய நோக்கத்தை முறி யடித்து, அமைதியை நிலைநாட்ட அனைத்துப்பிரிவு மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. உரிய நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்டிட வேலை செய்யுமாறு கட்சிக் கிளைகளுக்கு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.