சென்னை, ஆக. 8- மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகி யுள்ளது. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக சேர்க்கப்பட்ட வர்களுக்கு அவர் வழங்கிய மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி மூலம் தகவல் தெரிவிக் கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதற் கட்ட முகாமில் 80 லட்சம் விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலை யில் இரண்டாம் கட்ட முகாம்களிலும் லட்சக்கணக்கானோர் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு கோடி பேர் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். பயனாளர்களுக்கு குறுஞ் செய்தி இந்த தகவல்கள் அனைத் தும் பிரத்யேக செயலியில் பதிவேற் றப்பட்டுள்ளதால் அவை சரிபார்க் கப்படும், அதன் பின்னர் அதிகாரி கள் கள ஆய்வு நடத்தி தகவல்கள் உண்மை தானா என்பது குறித்து சோதனை செய்வார்கள். அதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பயனா ளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரப் படும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் போதே ஒரு கோடி பேரின் வங்கி கணக்குக் கும் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத் ்தப்பட்டுள்ளது.