states

கொரோனாவால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் தகவல்

சென்னை,ஜூன் 18- கொரோனா தொற்று உல கையே புரட்டிப்போட்ட முதல் ஆண்டில் 25 விழுக்காட்டினர் மன நல பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிய வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் மனநலம் பற்றிய ஆய்வை நடத்தி அதன்  அறிக்கையை வெளியிட்டுள் ளது. அதில் இடம் பெற்றுள்ள விபரங்கள் வருமாறு:- உலகில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகளில் கொரோனா பரவலால் ஏற்பட்ட  நெருக்கடி தான் இந்த தலை முறையில் ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது. இதனால் சுகாதாரம் மற்றும் பொருளா தாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொற்று மிகப்பெரிய அளவில் பரவிக் கொண்டிருந்த 2020 ஆம் ஆண்டில் நோயின் தாக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் மன நல பிரச்சினை 25 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

இதில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏற்கனவே மனநல  பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டிருந்தவர்கள் அதிக அளவில் பாதிப்படைந்தனர்.  உலக அளவில் 8 பேரில் ஒருவர் மனநல பிரச்சனைகளு டன் வாழ்வது தெரிய வந்துள் ளது. 5-ல் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டாலும் சுவாச பிரச்சினை இந்தியாவில் மட்டும் 4 கோடி பேர் பாதிக்கப்பட்ட னர். உலக அளவில் இந்த எண்ணிக்கை 14 கோடியை தாண்டி உள்ளது. 89.3 விழுக்காட்டினர் சுவாச கோளாறு பிரச்சினையை சந்தித்துள்ளார்கள். அடுத்ததாக 78.9 விழுக்காட்டினர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 55.2 விழுக்காட்டினர் அறிவாற்றல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளார்கள். அமைதி யின்மை, அதிகமான இதய துடிப்பு, தூக்கமின்மை, நெஞ்சு வலி, இடைவிடாத தலைவலி போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து ஒரு வருடங்களுக் கும் மேலாக அனுபவித்துள் ளார்கள். இவ்வாறு தெரிவித்திருக்கி றது.