சென்னை, ஜூலை 28- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடி யாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 26 அன்று மாநிலத் தலைவர் ரெஜீஸ் குமார் தலைமையில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலச்சந்திர போஸ், மணிகண்டன், கனக ராஜ், சிங்காரவேல், நந்தன் உள் ளிட்ட மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசி ரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவி றக்கம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியிருந்தது. பல் வேறு காரணங்களால் பெரும் பகுதி மாணவர்களால் சான்றி தழை பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை. சான்றிதழை பதிவிறக் கம் செய்ய முடியாதவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மூலம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ள லாம் என்று ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்திருந்தது. ஆனால், அவ்வாறு விண்ணப்பித்த மாண வர்களுக்கு இதுவரையிலும் சான் றிதழ் வழங்கப்படவில்லை.இத னால், அவர்களால் ஆசிரியர் பணி கேட்டு விண்ணப்பிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரி யர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களில் காலியாக உள்ள 11,825 பணியில் தற்காலிக அடிப் படையில் நிரப்புவதற்கான அறி விப்பை தமிழக அரசு வெளியிட் டது. இடைநிலை மற்றும் பட்ட தாரி ஆசிரியர்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற வர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வழிகாட்டியிருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றி ருந்தும் சான்றிதழ் இல்லாத கார ணத்தால் அவர்களுக்கு பணிநிய மனம் வழங்கப்படாத நிலை உள் ளது. எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறை உடனடியாக தலை யிட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் சான்றிதழ் கிடைப்பதற்கான நட வடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.