முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, செப்.16- காவிரி நதிநீர் பங்கீடு விவகா ரத்தில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்துவரும் நிலையில், தமிழ் நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் தலைமையில், ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ள னர். காவிரி தண்ணீரைத் திறந்து விடா ததற்கு, உண்மைக்கு புறம்பான பல கார ணங்களை, ஒன்றிய ஜல்சக்தி அமைச்ச ரிடம் கர்நாடக அரசு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறுவது என்றும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நீரை கர்நாடகம் உட னடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உத்தர விட வேண்டும் என வலியுறுத்துவது என்றும் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காவிரி நதிநீர் பிரச்சனையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லி குண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண் டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்ட வணை, உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந் தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டில் 14.09. 2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும். மேலும், கர்நாடக அரசானது, ஒன் றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களுக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக் கும் எனவும்,
காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடி நீர் இருக்கிறது எனவும் தவறான கருத் துக்களை தெரிவித்துள்ளது. இத்தகைய உண்மைக்கு புறம் பான அறிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலி யுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டா லின் தெரிவித்துள்ளார். மேலும், “13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதி யில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்கள் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணை யம் மற்றும் காவிரி நதிநீர் முறைப் படும் குழு (CWMA/CWRC) அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்” என்று ஒன்றிய அமைச்சரை, முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.